Wednesday, October 26, 2011

வெற்றிகொள்.


எதையும் அலட்சியம் செய்யாதே
எல்லாம் உனக்கு சாத்தியமாகம்
எதிலும் விரைந்து செயல்பட்டால்
ஏற்றம் பெறுவது உறுதியாகும்!
உச்சியைத் தொட்டு கீழே பார்த்தால்
உனக்கு தெரிவதெல்லாம் சிறிதாகும்
உயராது துவண்டு நின்றால் இங்கே
உனக்கு எல்லாம் அரிதாகும்!
எதையும் தாங்கும் இதயத்தை
எப்போதும் துணையாய் வைத்துக்கொள்
எதற்கும் துணிந்து முடிவுசெய்து
எதையும் எதிர்த்து வெற்றிகொள்!
-கவிஞர். விஜயபாரதி, மங்கலம்

Author: கவிஞர். விஜயபாரதி

0 comments:

Post a Comment