This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Wednesday, January 16, 2013

முள்ளங்கி மருத்துவக் குணங்கள்...


முள்ளங்கி மருத்துவக் குணங்கள்...



முள்ளங்கிக் கிழங்கு சிறுநீர் பெருக்கும்குளிர்ச்சியுண்டாக்கும். 

இலை பசியைத் தூண்டிச் சிறுநீர் பெருக்கித் தாது பலங்கொடுக்கும்.
சமைத்துண்ண அதிமூத்திரம்நீர்தடைவயிற்று எரிச்சல்ஊதின உடம்புகுடைச்சல்வாதம்வீக்கம்சுவாசக் காசம்,கபநோய்இருமல் ஆகியவை தீரும்.

முள்ளங்கிச்சாறு 30 மி.லி. காலைமாலை கொடுக்கச் சிறுநீரகக் கோளாறுநீர்தாரைக் குற்றங்கள் நீங்கும்.

இலைச்சாற்றை மி.லி. ஆக நாள்தோறும் வேளை சாப்பிட்டு வர மலக்கட்டுசிறுநீர்க் கட்டுசூதகக்கட்டு எளிய வாத நோய்கள் தீரும்.

இந்த முள்ளங்கியால் வாத நோய்நீர்வடியும் படையான கரப்பான்வயிற்றெரிச்சல்நரம்பு சூலை எனப்படும் உடல் நரம்பு வலிகாசநோய்தலைவலிமயக்கம்ஆஸ்துமா என்ற இரைப்புகடுப்பு என்ற சீதபேதி ஆகியன குணமாகும் 

சிறுநீரகத்தை நன்கு இயக்கும் குணமுடையது. அதனால் சிறுநீரைப் பெருக்கி நீர்கொர்வை என்ற உடல் வீக்கத்தைக் குறைக்கும். வாரம் இருமுறை இதனை உணவில் சேர்க்க வேண்டும். பொரியல்சாம்பார் எதுவும் செய்து சாப்பிடலாம். வெள்ளை முள்ளங்கி மிக்க குணமுடையது.

இதனை இடித்து சாறு பிழிந்து 30-50 மி.லி. அளவு காலைமாலை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இதுசாப்பிடும்போது உணவில் புளி தவிர்க்கவும். மேலே கூறப்பட்ட அனைத்து நோய்களும் குணமாகும். பிற மருந்துகளோடு இது இந்த நோய்களுக்குத் துணை மருந்தாகும்.

கருவுற்ற தாய்மார்கள் இதனை வாரந்தோறும் சாப்பிட்டு வந்தால் குழந்தைப்பேறு எளிதாகும். சிறுநீர் மிகுதியும் கழியும். கைகால் வீக்கம் வராது.

இதன் விதையைக் குடிநீராக – காசாயம் செய்து சாப்பிட்டு வந்தால் 
தாது விருத்தி உண்டாகும்

மீன் சாப்பிடுங்க! இதயநோய் எட்டிப் பார்க்காது!!


மீன் சாப்பிடுங்க! இதயநோய் எட்டிப் பார்க்காது!!



முறையற்ற உணவுப்பழக்கம், உடல் பருமன் போன்றவற்றினால் பெண்களுக்கு இதயநோய் ஏற்படுவது அதிகரித்து வருகிறது. அவர்கள் மீன் உணவுகளை உண்பதன் மூலம் இதயநோயில் இருந்து தப்பிக்கலாம் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.


15 முதல் 49 வயதுவரை உடைய 49000 பெண்களிடம் இது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் இதயநோய் பாதிக்கப்பட்டவர்களும் பங்கேற்றனர். அவர்களுக்கு வாரம் 3 நாட்களுக்கு மீன் உணவு கொடுக்கப்பட்டது. அவர்களின் உடல்நிலை குறித்து பின்னர் கேள்வி கேட்கப்பட்டது. அதில் மீன் உணவு உட்கொண்டவர்களுக்கு இதயநோய் பாதிப்பு குறைந்தது தெரியவந்தது.

ஒமேகா கொழுப்பு அமிலம்

மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இது ரத்தத்தில் உள்ள கொழுப்புகளை கரைக்க உதவுகிறது. கெட்ட கொழுப்பு ரத்தநாளங்களில் படிவதை தடுக்கிறது. இதன் மூலம் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவது குறைகிறது. இதனாலேயே இதயநோய் பாதிப்புகள் ஏற்படுவது தடுக்கப்படுவதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

வயதான பெண்களுக்கு

மீன் உணவு வகைகளை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் வயதான பெண்களுக்கு ஏற்படும் இதயநோய் அபாயம் குறைகிறது என புதிய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. வறுத்த மீனை சாப்பிடுவதை காட்டிலும், இதர முறையில் சமைத்து சாப்பிடும் மீன் உணவே நல்ல பலனை தருகிறது.

அமெரிக்காவில் உள்ள சிகாகோவின் நார்த் வெஸ்டர்ன் பல்கலைகழகத்தின் பேராசிரியர் டொனால்டுலாயிட் ஜோன்ஸ் தலைமையில் இந்த ஆய்வு நடைபெற்றது.சராசரியாக 63 வயது உள்ள பெண்கள் 84 ஆயிரம் பேரிடம் விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது ஓவன் முறையில் சூடுபடுத்தப்பட்ட மீன் உணவு வகைகளை சாப்பிட்ட பெண்களுக்கு இதயநோய் பாதிப்பு 30 சதவீதம் குறைந்து இருப்பது தெரியவந்தது. இத்தகைய உணவு முறையை கடைபிடிக்காதவர்களை ஒப்பிடுகையில் பொரிக்காத மீன்களை சாப்பிட்டு வந்தவர்கள் நல்ல உடல்நிலையுடன் இருப்பது தெரியவந்தது. ஓவனில் பதப்படுத்தப்பட்டு சூடு செய்யப்பட்ட மீன் உணவுகளை சாப்பிடுவது நல்ல பலனைத் தரும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கறுப்பு மீன்கள், சாலமோன் மீன்கள், இதர துனா மற்றும் வெள்ளை மீன்கள் உணவுகளை காட்டிலும் சிறந்த பலன் அளிப்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். மீன்களை வறுத்து சாப்பிடுவதால் மீன் சத்துகள் கிடைக்காமல் போவதுடன் அத்தகைய உணவு தயாரிப்பு உடலுக்கு தீங்கு விளைவிக்கும் எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். வறுத்த மீனை வாரம் ஒருமுறை சாப்பிடுவதால் இதய நோய் பாதிப்பு 48 சதவீதம் கூடுதல் ஆகிறது எனவும் அந்த ஆய்வில் எச்சரிக்கப்பட்டுள்ளது.


thanks:Por Kalangiyam

Sunday, January 13, 2013

சூரிய வழிபாடு

Posted Image





01.01.13 புத்தாண்டு பொங்கல் ஸ்பெஷல்  

   பாரதத்தில் சூரிய வழிபாடு இன்று நேற்று  ஏற்பட்டதல்ல. ரிக்வேத காலத்துக்கும் முன்பிருந்தே இந்த வழிபாடு இருந்து  வருகிறது. அசையும் பொருள்கள் அனைத்திற்கும் சூரியனே உயிர் தருகிறான்  என்கின்றன, வேதங்கள்! 

இந்த வழிபாடு எப்படி ஏற்பட்டது என்பது பற்றி நிச்சயமாக ஒன்றும்  கூறமுடியவில்லை. கி.மு.2000-க்கு முன்பே சூரியன், அக்னி, வருணன் ஆகியோரை  இந்தியர்கள் வழிபட்டு வந்துள்ளனர்.

நம்நாடு சூரிய வெப்பம் மிகுந்த  நாடு. ஆகவே, அவன் அருளைப் பெற அவனை மக்கள் வழிபட முற்பட்டதில் வியப்பில்லை.  பல நோய்களை சூரிய கிரணங்கள் குணப்படுத்துவதாக அதர்வண வேதம்  குறிப்பிடுகிறது. உபநிஷத்துக்களும் புராண இதிகாசங்களும் சூரியனின் புகழைப்  பேசுகின்றன. பிற தெய்வங்களைப் போல் அல்லாமல் சூரியன் கண்ணெதிரே தோன்றும்  தெய்வமாக விளங்குகிறான். 



Posted Image


சூரியன் ஒரு கோள்! கிரகம்! அதைக் கடவுளாக வழிபடலாமா  என்ற சந்தேகம் எழலாம். வேதம் ஒன்றுதான் இந்த சந்தேகத்தைப் போக்குகிறது.  வேதமே, சூரியன் கோள மயமானதுதான் என்கிறது. வேதகால ரிஷிகள், ‘சூரியனே  தண்ணீருக்கெல்லாம் ஆத்மா என்று குறிப்பிடுகிறார்கள். சூரியனால் உலகத்துக்கு  ஏற்படும் நன்மைகளையும் வேதம் வரிசைப்படுத்திக் கூறுகிறது. 

வேதத்தில்  காணும் உண்மைகள், நவீன விஞ்ஞான உண்மைகளுக்கு முரணாக இல்லை. சூரிய ஒளியில்  நிறப்பிரிகை ஏற்பட்டால் ஏழு வண்ணமாகப் பிரிகிறது. ஏழு வண்ண ஒளியின்  சேர்க்கையே சூரிய ஒளி. சூரியனுக்கு ஏழு குதிரைகள் என்று வேதம் வர்ணிப்பதன்  சூட்சுமம் இதுவே. குதிரையை அசுவம் என்பர். அசுவம் என்ற சொல்லுக்கு வண்ணம்  என்றும் பொருளுண்டு. 

பாரசீகத்தில் தங்கிவிட்ட ஆரிய குலத்தினர்  சூரியனை வழிபட்டார்கள் என்றாலும், அக்னிக்குத்தான் அவர்கள் முக்கியத்துவம்  கொடுத்தார்கள். இந்தியாவுக்கு வந்த ஆரியர்கள் திராவிடர்களுடன் கலந்து  விக்ரக ஆராதனையை மேற்கொண்டார்கள். சூரியனை விஷ்ணுவின் அவதாரமாக இவர்கள்  கொண்டார்கள். 

சூரிய வழிபாட்டினால் தோல் நோய், கண் நோய்கள்  குணமாகிவிடும் என்று பாரசீகர்கள் நம்பினார்கள். பாரசீக மத குருக்களான  மாகாஸ்கள், சூரிய வழிபாட்டின் மூலம் சிகிச்சை செய்யும் மருத்துவர்களாக  விளங்கினர்.

பஞ்சாபை ஆண்ட மன்னன் ஒருவனுக்கு தோல் நோய் ஏற்பட்டது.  அவன் மாகாஸ்களை வரவழைத்தான். நோய் குணமாகவே, இப்போது பாகிஸ்தானில் உள்ள  ‘மூல்தான்Õ நகரில் அவன் சூரியனுக்காகவே ஒரு கோவில் கட்டுவித்தான். 2000  ஆண்டுகளுக்கு முன் கட்டிய இந்த ஆலயம்தான் பண்டைய இந்தியாவில் சூரியனுக்காக  ஏற்பட்ட முதல் கோயில்.

இந்த ஆலயம் அவுரங்கசீப் காலத்தில்  அழிவுற்றது. மூல்தானிலிருந்து சூரியவழிபாடு காஷ்மீருக்குப் பரவியது. பிரபல  மன்னனான லலிதாதித்ய முக்தா பீடன் என்பவன் இங்கே சூரியனுக்கு ஒரு கோயில்  கட்டினான். இந்தக் கோயில், கிரேக்க ஆலய அமைப்பில் கட்டப்பட்டது. பின்னர்  வந்த இஸ்லாமிய மன்னன் சிக்கந்தர் பட்டீஸ்கான் (கி.பி.1391 - 1414) இந்தக்  கோயிலை இடித்து நாசமாக்கி விட்டான். 

சூரியனுக்காகக் கட்டிய  புராதனக் கோயிலில் ஒன்று ஒரிஸ்ஸாவிலுள்ள கொனார்க் கோயில். கலிங்கத்தை ஆண்ட  நரசிங்க தேவன் (கி.பி.1238 - 64) இதைக் கட்டினான். இப்போது இந்தக் கோயிலின்  ஒரு பகுதி மட்டுமே மிஞ்சியிருக்கிறது. இந்த ஆலயத்தில் உள்ள சிற்பங்கள்  உலகில் வேறு எங்கும் காணக் கிடைக்காத வேலைப்பாடு மிக்கவை.

தமிழ்நாட்டில் கும்பகோணத்தை அடுத்துள்ள சூரியனார் கோயில் என்ற இடத்தில் சூரியனுக்கென்று தனி ஆலயமே இருக்கிறது.

சூரியனைப்  பரம்பொருளாக ‘ஆதித்ய ஹிருதயம் கூறுகிறது. மார்க்கண்டேய புராணம், பவிஷ்ய  புராணம் முதலியவை சூரிய வழிபாட்டை விவரிக்கின்றன. மந்திரங்களில் மிக சக்தி  வாய்ந்ததாகக் கருதப்படும் ‘காயத்ரிÕ சூரியனுக்கு உகந்த மந்திரம்.

‘சூரிய நமஸ்காரம்Õ என்பது உடற் பயிற்சி, யோகப் பயிற்சியுடன் கூடிய வழிபாடு. இன்று இது மேனாட்டிலும் பரவியுள்ளது.

சூரிய  வழிபாடு ‘சௌர மதம் என்ற பெயரில் ஷண்மதங்களுள் ஒன்றாக இருந்து  வந்திருக்கிறது. சௌர மதம் ஒரு காலத்தில் உலகளாவிய மதமாகவும்  பரவியிருக்கிறது. ரோமில், கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் கிறிஸ்துவ மதத்தையே  சௌரம் எதிர்த்து நின்றது. கி.மு.1400-ஆம் ஆண்டு முதலே மத்திய கிழக்கு  நாடுகளிலும் அது பரவியிருந்தது. எகிப்தில் சூரியனை ‘ரேÕ அல்லது ‘ரா-அதுன்  என்று குறிப்பிட்டார்கள். எகிப்திய அரசர்கள் தங்கள் பெயரோடு ‘ரே என்ற  பெயரையும் சேர்த்துக் கொண்டார்கள்.

ஆதிகாலத்தில் சௌர மதத்தினர் சூரியனுக்கு ரத்த அர்க்கியம் கொடுத்து வழிபட்டார்கள். ஆதிசங்கரர்தான் இதை மாற்றினார்.

தை  மாதம் முதல் நாள் - சூரியன் மகர ராசிக்குள் (உத்தராயணம்) பிரவேசிக்கும்  நாள் பொங்கல் பண்டிகையாக கொண்டாடப்பட்டு சூரிய வழிபாடு நடத்துகிறார்கள்.  கீதையில் கண்ணபிரான் ‘ஜ்யோதிஷம் ரவிர் சும் சுமான்’ என்று கூறி,  ஜ்யோதிகளில் தாம் சூரியனாக இருப்பதாகத் தெரிவிக்கிறார்.

அந்தக் காலத்தில் ரிஷிகள் சூரியனின் கனிந்த ஒளியிலே நாள் தவறாமல்  திளைத்து வந்தார்கள். சூரிய கிரணங்களை ‘ஜீவத்திறல்Õ என்றும் ‘ஆயுளை  வளர்க்கும் அன்னம்Õ என்றும் போற்றினார்கள். அவர்கள் உடல், உள்ளம், உயிரில்  தேவசக்தியும் தெய்வ ஒளியும் துள்ளின. 

சுற்றும் உலகுக்கே சூத்திரமாக  விளங்கும் சூரியனின் பெருமை இன்று சுருங்கிப்போய்விட்டது. என்றாலும்,  பொங்கல் திருநாளில் மட்டும் ஆதித்தனைப் போற்றும் பழக்கம் இன்றும்  தொடர்கிறது...!


ஆர். சி. சம்பத்

நன்றி"குமுதம்"