This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Saturday, July 23, 2011

சுலபமான வேலை

குழந்தை வளர்ப்புதானே! 
அது ரொம்ப சுலபமான வேலை!குழந்தை நம்முடையது அல்ல:
பிறருடையது என்று பாவித்துக் கொள்ள வேண்டும்.அவ்வளவுதான்!
பிறருடைய குழந்தையை எப்படி வளர்க்க வேண்டும் என்பது 
தெரியாதவன் எவனுமே இவ்வுலகில் இல்லை!
**********
பிறர் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்களோ என்று நினைக்கத் தொடங்கினால் அவர்கள் உங்களைப் பற்றி நினைக்காததை  எல்லாம் நினைப்பதாக நீங்களே நினைத்துக் கொள்வீர்கள்.
**********
அன்பு டெலஸ்கோப  வழியாக எதையும் பெரிதாகப் பார்க்கிறது.

பொறாமை மைக்ராஸ்கோப  வழியாகச் சின்னதாகப் பார்க்கிறது.
**********
இரண்டு பொருட்களை நாம் இழந்த பிறகுதான் அதன் மதிப்பை உணர்கிறோம்.

ஒன்று ஆரோக்கியம்,மற்றொன்று  இளமை.
**********
வீரம் உள்ளவன் என்று பாராட்டப்படுபவன் சாதாரண மனிதனைக் காட்டிலும் தைரியசாலி அல்ல.சாதாரண மனிதனைக் காட்டிலும் பத்து நிமிடம் கூடுதலாகத் தாக்குப் பிடிக்கிறான்.அவ்வளவுதான்.
**********
அனுபவம் என்பது ஒரு புது விதமான ஆசிரியர்.

அது பாடங்களைக் கற்றுத் தந்தபின் தேர்வு வைப்பதில்லை.
தேர்வின் மூலம் தான் பாடங்களைக் கற்றுத் தருகிறது.
**********
வாழ்ந்தே ஆக வேண்டும் என்ற அளவுக்கு இன்பங்களும் மடிந்தே ஆக வேண்டும் என்ற அளவுக்குத் துன்பங்களும் சம விகிதத்தில் கலந்ததே இவ்வுலகம்.
**********

சிந்தித்து சிந்தித்து இறந்து போனவர்கள் யாருமில்லை.

விளையாடி விளையாடி இறந்து போனவர்கள் உண்டு:
சாப்பிட்டு சாப்பிட்டு இறந்து போனவர்கள் உண்டு:
குடித்துக் குடித்து இறந்து போனவர்கள் உண்டு.ஆனால்
சிந்தித்து சிந்தித்து இறந்து போனவர்கள் யாருமில்லை.

**********
குறுகலாகப் பார்த்தால் குறுகலாகத் தெரியும்.
மட்டமாகப் பார்த்தால் மட்டமாகத் தெரியும்.
சுயநலத்தோடு பார்த்தால் சுயநலமாகத் தெரியும்.
பரந்த,தாராளமான சிநேகிதமான மனத்தோடு
பாருங்கள்.அற்புதமான மனிதர்கள் உங்கள்
கண்ணில் படுவார்கள்.
**********
துரதிருஷ்டம் இரண்டு வகை:
ஒன்று நமக்கு வரும் துரதிருஷ்டம்.
மற்றது பிறருக்கு வரும் அதிருஷ்டம்.

**********
உயர்ந்த மனிதன் மூன்று நெறி அம்சம் உடையவன்.
அவன் ஒழுக்கமானவன்.
ஆகவே அவன் கவலைகளிலிருந்து விடுபட்டிருக்கிறான்.
அவன் அறிவாளி:
ஆகவே குழப்பங்களிலிருந்து விடுபட்டிருக்கிறான்.
அவன் தைரியசாலி.
ஆகவே அச்சத்தினின்றும் விடுபட்டிருக்கிறான்
.
**********
ஒரு மனிதனுக்கு என்ன நடந்ததோ
அது அனுபவமாகி விடாது.
தனக்கு நடந்ததை வைத்து அவன் என்ன
செய்கிறான் என்பதுதான் அனுபவம்.
**********
அவனுடைய வேலையை நான் இன்னும் நன்றாகச் செய்வேனே,இவனுடைய வேலையை இன்னும் பிரமாத மாகச்  செய்வேனே என்று எண்ணி நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்காமல் உங்கள் கையிலுள்ள வேலையை இன்னும் நன்றாகச் செய்யுங்கள்.
**********

மனதைக் கவர்ந்த சில பொன்

எனக்குப் பின்னால் நடக்காதீர்கள்,
நான் உங்களை அழைத்துச் செல்ல மாட்டேன்.


எனக்கு முன்னால் நடக்காதீர்கள்,
நான் உங்களைப் பின்பற்றமாட்டேன்.


என்னோடு சேர்ந்தும் நடக்காதீர்கள்! 
தயவு செய்து என்னைத் தனியாகச் செல்ல விடுங்கள்!


மற்றவர்களைப் பற்றி குறை சொல்லும் முன்னால் 
அவர்களுடைய காலணியில் இருந்து பாருங்கள். 
அப்போதுதான் நீங்கள் குறை சொல்லும் போது 
அவனிடமிருந்து ஒரு மைல் தள்ளியிருப்பீர்கள் - 
அவனது காலணியுடன்.


காதலியை மனைவியாக்கத் துணிவு தேவை:
மனைவியைக் காதலியாக்கக் கனிவு தேவை.



உன்னால் எல்லாம் முடியும்.

துளித்துளியாய்க் கொட்டித்தானே. 


குடம் நிரம்புகிறது...

Friday, July 22, 2011

வெற்றி என்பது யார்கையில்

வெற்றி என்பது யார்கையில்
விவேகம் என்பது எத்துறையில்
பற்றித் துணிந்து செய்தாலே
பறந்து வருமே நம்பிக்கை

வெட்டி விட்டால் மரம் துளிர்க்கும்
விவேகம் வைத்தால் வெற்றிவரும்
துட்டிற்காக ஆசை வைத்தால்
தொடர்ந்து தூய்மை வெளியேறும்


தோல்வி வந்தால் துவளாமல்
தொடர்ந்து முயன்றால் வெற்றிவரும்
ஆல்போல் நெஞ்சம் உறுதி கொண்டால்
அனைத்தும் நமது கைக்குவரும்


கிடைக்கும் என்றநம்பிக்கை
கீழே விழுந்தும் துணிந்தெழுந்தால்
படைக்கும் ஆற்றல் கைக் கொண்டால்
பாரே நம்மைப் பாராட்டும்.


முயன்று முயன்று சாதித்து
முத்திரை ஒன்றினை நாம்பதித்தால்
வியந்து வருமே வெற்றியது
வெல்லும் ‘தன்னம்பிக்கை’ ஒன்றேதான்!


- கவிஞர் பொன். கிருட்டிணன்
தாரமங்கலம், சேலம்.

முயன்றால் முடியாதது இல்லை


வாழ்க்கையில் உயரத் துடிக்கும் உள்ளங்களே! நீங்களும் குறிக் கோளில் உறுதி உள்ளவர்களாகத் திகழ வேண்டும். ஒரு செயலில் முயற்சியுடன் ஈடுபடும் போது, நீங்கள் சோர்வடையாமல் உற்சாகத் துடன் செயலாற்றவேண்டும்.
‘பெரிய பலன்கள் இடையறாத, கடின உழைப்பினாலேயே கிடைக்கின்றன. பலவீன மான உள்ளங்கள் கூடக் கடுமையான உழைப் பினால் பலம் பெற்றுவிடுகின்றன’ என்கிறார் தத்துவஞானி பேக்கன்.
நீங்கள் தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருங்கள். இடைவிடாமல் பெய்கின்ற மழையால் சலவைக்கல்கூடத் தேய்ந்து போகும்’ என்று குறிப்பிடுகிறார் ஷேக்ஸ்பியர்.
‘லட்சியத்தை அடைவதில் பெரிய மகத்துவம் எதுவும் இல்லை. அந்த லட்சியத்தை அடைவதற்காக நடத்தும் போராட்டம்
இருக்கிறதே, அதில்தான் எல்லா மகத்துவங்களும் அடங்கி இருக்கின்றன’ என்கிறார் மில்னஸ்.
வாழ்க்கையாக இருந்தாலும் சரி, படைகள் மோதிக்கொள்ளும் போர்க்களமாக இருந்தாலும் சரி, உழைப்பு, உறுதி, விடாமுயற்சி ஆகியவை தாம் இறுதியில் வெற்றியைத் தருகின்றன. நெப்போலியன் மிகப்பெரிய வீரன். போர் என்றால் அவனுக்கு உயிர். அத்தகைய நெப்போலியன், வெலிங்டனிடம் தோற்றான். வெலிங்டன் தன்போர் வீரர்களிடம் சொன்னான்!
‘வீரர்களே! பலமாகத் தாக்குங்கள்! இந்தப் போர்க்களத்தில் யாரால் நீடித்துத் தாக்க முடிகிறதோ அவர்களுக்குத்தான் கடவுள் அனுக்கிரகம் கிடைக்கப் போகிறது’ வெலிங்டன் எவ்வளவு பெரிய உண்மையைச் சொன்னான்.!
”ஸ்காட்லாந்து நாட்டு அரசன்

ப்ரூஸ், போரில் தோற்றுப்போய்
நாட்டை இழந்து, காட்டிலே
தலைமறைவாக வாழ்ந்து
கொண்டிருந்தான்.
சோர்வுடன்
அவன் படுத்துக்
கொண்டிருந்த போது,
சுவரின் மீது சிலந்திப்பூச்சி
ஏறிக் கொண்டிருப்பதைப்
பார்த்தான். அது தன்னுடைய
கூட்டை நெருங்கிய போது வழுக்கிக் கீழே விழுந்தது. கீழே விழுவதும், மறுபடியும் ஏறுவதுமாகப் பலமுறை முயன்று
இறுதியில் வெற்றி பெற்றது.
தோல்விகளைப் பொருட்படுத்தாமல் தன்னுடைய இருப்பிடத்தை அடையும் வரையில் சிலந்தி காட்டிய விடா முயற்சியிலிருந்து ப்ரூஸ் ஒரு பாடத்தைக் கற்றுக் கொண்டான். அவனு டைய உள்ளத்தில் நம்பிக்கை ஒளி பிறந்தது. சிதறிக் கிடந்த தன்னுடைய படைகளை மறுபடியும் ஒன்று திரட்டினான். போரில் பகைவர்களை வென்று நாட்டை மீட்டு மீண்டும் அரசனான்.
இடைவிடாத முயற்சியுடையவன் வீட்டுக் கதவைச் செல்வம் என்றமங்கை தட்டு வாள். இதில் ஐயமில்லை. முயற்சிகள் தொடரு மானால் வெற்றியும் உங்கள் வாழ்க்கையில் படரும். மின்சாரத்தைக் கண்டுபிடித்த எடிசன், முயற்சியினால் முன்னுக்கு வந்தவர் அல்லவா?
மனம் தளராமல் இடைவிடாது முயற்சி செய்யுங்கள். உழைத்துவிட்டுக் காத்திருங்கள். பலன் கை மேல் கிடைக்கும்.
தச்சுப் பட்டறையில் வாழ்க்கையைத் தொடங்கிய ஆபிரகாம் லிங்கன் விடாமுயற்சி யின் விளைவாக, அமெரிக்க ஜனாதிபதி பதவியை அடைந்தார். கல்வி கற்று வாழ்க்கையில் முன்னேறவேண்டும் என்றஆர்வத்துடன் புத்தக மூட்டையைத் தலையிலே சுமந்து, ஆற்றைக் கடப்பதற்குத் தினமும் நீந்தி, கடந்து பள்ளிக்குச் சென்று படித்து முன்னுக்கு வந்தார். படிப் படியாக உயர்ந்து ”பாரதப் பிரதமர்” என்ற உன்னதமான பதவியை அடைந்தார் லால்பகதூர் சாஸ்திரி. தன்னுடைய அயராத உழைப்பினால் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்கிறபெரிய பதவியை அடைந்தார் காமராஜர். ஏழைக் குடும்பத்திலே பிறந்த ஜஸ்டீஸ் முத்துச்சாமி ஐயர் தெருவிளக்கு வெளிச்சத்தில் படித்து முன்னேறி னார். படிப்படியாக உயர்ந்து சென்னை உயர்நீதிமன்றநீதிபதியானார்.
வாழ்க்கையின் பெரிய முட்டுக்கட்டை யாக ஏழ்மை இருக்கிறதே என்று எண்ணி சோர்வு அடையாதீர்கள். உழைப்புக்கு நீங்கள் ஒரு போதும் ஓய்வு கொடுத்துவிடாதீர்கள். முயன்றால் முடியாதது இல்லை என்பதை நீங்கள் உணர வேண்டும். உழைப்பு ஒருபோதும் வீண் போவதில்லை. உழைப்பு தோற்றுப்போனதாக சரித்திரம் இல்லை.
எந்த முயற்சியாக இருந்தாலும் அதில் நேர்மை இருக்க வேண்டும். நேர்மையற்ற முயற்சியால் எந்தப் பலனும் இல்லை. எல்லோரையும் நடுங்க வைக்கின்ற கொலை காரனும், பணத்தைக் கொள்ளையடிக்கும் கொள்ளைக்காரனும் இடைவிடாத முயற்சி யினால் தாங்கள் நினைத்த காரியங்களைச் சாதித்துக் கொள்கிறார்கள். ஆனால், இவை களெல்லாம் முயற்சிகள் ஆகுமா? இவைகளை உண்மையான உயர்வு என்று ஏற்றுக்கொள்ள முடியுமா?
எனவே, முயற்சியுடன் உழைத்துக் கொண்டே இருங்கள். நீங்கள் உயர்வது மட்டுமல்ல, உங்களைச் சார்ந்த சமுதாயமும் உயரும். இதில் ஐயமில்லை. முயன்றால் முடியாதது எதுவுமே இல்லை.

- தாராபுரம் சுருணிமகன்

வெற்றி மீது வெற்றி வந்து சேரும்

புதியதாய் பிறந்திருக்கும் இப்புத்தாண்டில் தன்னம்பிக்கை வளர்க்கும் இப்புத்தகத்தின் கருத்துக்களை கண்களால் மனதில் பதிய காத்திருக்கும் உங்களுக்கு எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த சந்தோஷ நிமிடங்கள் மணிகளாக, நாட்களாக, வருட வருடங்களாக தொடர இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்வோம்.
வெற்றி ஒருமுறை மட்டும் வருவதில்லை. நாமும் அப்படி வருவதை விரும்புவதுமில்லை. நாமோ நம் குழந்தைகளோ பத்தாம் வகுப்பு தேர்வில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றால் ப்ளஸ் டூவில் அதைவிட சிறப்பான வகையில் தேர்ச்சி பெறவிரும்புகிறோம். பிறகு கல்லூரி, வேலையில், தரம் உயர்ந்த வாழ்க்கை என தொடர்ந்து வெற்றி பெறவேண்டும் என்ற எண்ணம் நமக்குள் உருவாகிக்கொண்டே இருக்கும்.
ஒருமுறை வெற்றி பெற்ற தருணத்தில் வெற்றியினால் ஏற்பட்ட சந்தோஷம் இருக்கும் அதேவேளை தோன்றும் இன்னொன்று என்னவென்றால் அடுத்த வெற்றியை இதேபோல் அல்லது இதைவிட சிறப்பாக பெறவேண்டும் என்பது தான். இப்படி வெற்றிமீது வெற்றி பெற இனிவரும் வார்த்தை கோவைகள் உறுதுணை புரியும்.
வாழ்க்கையில் சில பண்புகளை சிறப்பாக வளர்த்துக் கொண்டால் வெற்றியின் தொடர் ஓட்டம் நம்மை நோக்கித்தான்.
உற்சாகமும் பின்பற்றுதலும்
நாம் செய்யும் செயலை உற்சாகத்துடன் தொடங்கி அதை தொடர்ந்து பின்பற்றிட வேண்டும்.
கொள்கை
நாம் செய்யும் செயலை செய்வதற்கான கொள்கையை நிச்சயம் வகுத்துக்கொள்ள வேண்டும். நல்ல நோக்கமுள்ள கொள்கை வெற்றிக்கு அவசியம் தேவை.
திறமை
உண்மை, தேர்ச்சிபெற்ற திறமை, இவை நம் வெற்றிக்கான செயல்பாடுகளை இலகு வாக்கும். இந்த பண்புகளோடு நல்லதை எடுத்துக் கொள்வோம், தீயவைகளை விட்டொழிப்போம் என்ற மனப்பாங்கினை நமதாக்கிக் கொண்டு; நண்பர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்திக் கொண்டு, எதிரிகள்… அப்படி யாரும் இல்லை என்ற நிலைநோக்கி செல்லுங்கள். பணம் இருக்கிறது அல்லது இல்லை என்பதை மற்றவர்களிடம் பேசாதீர்கள். உங்களால் வாங்க முடியாத கடனை திருப்பி செலுத்த முடியாத நிலை தெரிந்து கடன் பெற்று வாங்காதீர்கள். பக்கத்துவீட்டுக்காக வாழாதீர்கள். நண்பர்களை மதித்து குழந்தைகளிடம் அன்பு கொண்டு வாழ்க்கையை பூர்ணமாக அனுபவியுங்கள். எல்லாவற்றிற்கும் மேலாக மேற்கூறிய பண்புகளுடன் வெற்றியை நோக்கி நடந்து (செயல்படுங்கள்) பாருங்கள் அதற்கான நல்வழியும் சுகமும் தெரியும்.
வெற்றியை நோக்கி நடக்கும்போது உங்களுக்குள் அதற்கான இலக்கு இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். தோல்வியை பற்றி நினைக்காதீர்கள். அது வெற்றிக்கான தடைகள், தடைகளை தகர்த்தி வெல்லுங்கள். நீங்கள் மற்றவர்களுக்கு முன் உதாரணமாக விளங்குங்கள்.
வெற்றிப் பாதையில் பிரச்சனைகள் இல்லாமல் இருக்காது. ஆனால் நீங்கள் எக்காரணத்திற்காகவும் பிரச்சனையின் அங்க மாக மாறாதீர்கள். தற்போதைய சூழலை ஏற்றுக் கொண்டு உண்மைநிலையை உணருங்கள். அப்படி செய்வதால் புதிய சூழலுக்கு உங்களை உட்படுத்திக் கொள்ள முடியும்.
அனுபவம் அதை அனுபவிக்க வேண்டும். எனவே, கற்றதில் இருந்து கற்க வேண்டியதை கற்க கற்றுக் கொள்ளுங்கள்.
கடமையுணர்வு, சுயநலமின்மை, நேர்மை இவைகளை எல்லா நேரமும் உங்களுடன் இருக்க வைத்துக் கொள்ளுங்கள். இதனால் உடன்பாட்டு எண்ணங்கள் உங்களுக்குள் ஊற்றெடுக்கும் அது வாழ்க்கையை உண்மையாக உயரவைக்கும்.
நண்பர்களே, உங்கள் வமையை மதிப்பிடுங்கள். வெற்றியை உங்கள் வாழ்வில் அடையாளம் காணுங்கள். சுயஒழுக்கம் அதற்கான மதிப்பையும் புரிந்து கொள்ளுங்கள். நல்லவராக, நல்லதை செய்யக்கூடியவராக ஏன் இருக்க வேண்டும் என உங்களுக்குள் கேள்வி கேட்டுப் பாருங்கள். விடை கிடைக்காத போது பொறுமை காத்திருங்கள். ஆலோசனை கேளுங்கள். வெற்றிப் பயணத்தில் காத்திருத்தல் சுகம் அளிக்கும்.
வெற்றிக்கான தகவல் பெறுவது முக்கியம் அதேபோல தகவல் கொடுப்பது என்பது அதைவிட முக்கியம். விமானத்தில் பறக்கும் போது விமானிக்கு தகவல் பெறுவதும் தகவல் தருவதும் எவ்வளவு முக்கியமோ அதைப் போலத்தான் எல்லா செயலுக்கான வெற்றிக்கும் அதைச்சார்ந்த தகவல் முக்கியமானதாகிறது.
நட்பு, உறவு வளர்த்துக் கொள்ளுங்கள். அது வெற்றிக்கான விதையை வளர்க்க உதவும். வீதியில் வீசினால் விதை முளைக்காது. சிரத்தை எடுத்து நிலம் தோண்டி விதையிட்டு நிலம்மூடி நீர்ப்பாய்ச்சினால் விதைக்கப்பட்ட விதைக்கு வெற்றி; விதைத்த நபருக்கும் வெற்றி. திறம்படச் செய்ய சிரத்தை எடுத்தே ஆக வேண்டும்.
எதைச் செய்தாலும் காலத்தை கருத்தில் கொள்ளாமல் செய்துவிட முடியாது. காலம் அத்துணை முக்கியத்துவம் வாய்ந்தது. பூமி பிறந்தது எப்போது என காலம் கணிப்பதிருந்து பூமியில் மனிதன் தன் வாழ்க்கை இருக்கும் வரை காலம் அதன் வாழ்க்கையை வழிநடத்திட அத்தியாவசியமானது. அதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை புரிந்து கொண்டு செயல்பட்டால் காலத்தின் சரியான பயன்பாடே நம் வெற்றியின் அளவுகோல். காலத்தை நாம் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் கட்டுப்பாட்டுடன் நாம் செயல்பட வேண்டும். ஆற்றுவெள்ளம் அது செல்லும் பாதையை பொறுத்து அதன் வேகம் மாறுகிறது. அப்படி செல்லும் ஆற்றில் நாம் எப்படி தொடர்ந்து நீந்த வேண்டும் என்பது போல்தான் காலத்தோடு நம் வாழ்க்கை. நீந்த முடியும் வரை வாழ்க்கை. கரையில் ஒதுங்குவதும், ஓய்வெடுப்பதும் மறுபடியும் நீந்த நம்மை தயார்படுத்திக் கொள்வதாகத்தான் அர்த்தமாகிறது. இல்லை யெனில் அத்தோடு வாழ்க்கையின் வரையறை என்றாகிவிடும். எனவே நண்பர்களே காலத்தில் நம் திட்டமிடலுடன் வெற்றியை நோக்கி பயணிப்போம்.
நண்பர்களே, இப்புத்தாண்டில் முழுமனதோடு கீழ்க்காணுமாறு உரக்க (மற்றவர்கள் கேட்கும் அளவுக்கு அல்ல; உங்கள் மனம் கேட்கும் அளவுக்கு) சொல்லுங்கள்.
>> என் செயல்களுக்கு நானே பொறுப்பு
>> அன்பு, ஆத்திரம், கோபம், முடிவெடுத்தல் முதயவற்றிற்கும் நானே பொறுப்பு.
>> மற்றவர்களுடன் எப்படி பழகியிருக்க வேண்டும், பழகவேண்டும் என்பதற்கும் நானே தான் பொறுப்பு
>> என் சுக துக்கங்களுக்கும் நானே பொறுப்பு
>> என் வாழ்க்கைக்கு முழு பொறுப்பும் என்னிடம் மட்டுமே உள்ளது.
>> பொறுப்புகள் என்னுடையதாக இருப்பதால் வெற்றியும் என்னுடையது.
>> வெற்றிப் பெறுவேன் வெற்றிப் பெறுவேன்
thanks Author: ஆர். முருகேசன், M.A., M.Phil., Ph.D. (Psy)

Tuesday, July 19, 2011

அலட்சியப்படுத்தாதே… இலட்சியப்படுத்து

மெர்வின்
Author: மெர்வின்

                          நம்மை மனிதனாக உருவாக்க வேண்டும் என்பதுதான் இறைவனுடைய இலட்சியம். அவருக்கு நம்மை படைக்க வேண்டும் என்ற இலட்சியம் இருக்கின்றபோது, அவரால் தோற்றுவிக்கப்பட்ட நமக்கு எப்படி இலட்சியம் இல்லாமல் இருக்க முடியுமா?
உயிர் இல்லாத மனிதனைக் காணமுடியாதது போல இலட்சியம் இல்லாத மனிதனைக் காண முடியாது.
எந்தவிதமான இலட்சியத்தைக் கொண்டு இருக்கிறோமோ அந்த விதமாகவே வாழ்க்கை அமையும். நாம் எப்படிப்பட்ட இலட்சியத்தை மேற்கொள்ளப் போகிறோம்.
வெற்றி வீரர்களாக, அறிஞர்களாக, மேதையாக மாறப் போகிறோமா? அல்லது வெந்த சோத்தைச் சாப்பிட்டு நொந்துப் போகப் போகிறோமா? எப்படி இருக்க வேண்டும் என்பதை நாம் தான் தீர்மானம் செய்து கொள்ள வேண்டும். நாம் எடுத்துக்கொள்ளும் இலட்சியம் தான் வாழ்க்கையை வளமுடன் வாழ வழிகாட்டும்.
வாழ்க்கைக்கு வழிகாட்டியாக உயர்ந்த ஓர் இலட்சியம் இல்லாவிட்டால் மனிதன் மிருகமாகிவிடுவான் என்கிறார் விவேகானந்தர்.
உயர்ந்த இலட்சியவாதிகள் மூலம்தான் நிலையான வாழ்க்கையை நிறுவ முடியும் என்று கூறுகிறார் எமர்சன்.
இலட்சியத்தை நேசிக்கிறோம் என்பதற்கு அடையாளம் என்னவென்றால் அதற்காக வாழ்ந்து காட்டுவதுதான்.
நம்முடைய இதயத்தில் எந்த இலட்சியத்தைக் கொண்டு இருக்கிறோமோ அதற்கு ஏற்றபடிதான் வாழ்க்கை அமையும்.
உயரமான மலைகளின் மீது ஏறிச்சென்று இதுவரை மனிதனது அடிச்சுவட்டையே காணாத நாடுகளை ஆராய்ந்தவர்களுடைய இலட்சியத்திற்கு முன் குறுக்கே எதுவும் நிற்க முடியாது.
கிரீன்லாந்தில் விஞ்ஞான ஆராய்ச்சி நடத்துவதற்காக நண்பருடன் புறப்பட்டார் எரிக்ஸன். சில மாதங்களுக்குள் இவர்களிடம் இருந்த உணவுமுடிந்து போயிற்று. காலில் அணிந்திருந்த காலுறைகளும் கிழிந்துவிட்டன. பட்டினியோடும் வெறுங்கால்களுடனும் கடுங்குளிரில் நடந்தனர்.
நடக்கச் சக்தியற்ற நிலை வந்தும் எரிக்ஸன் நெடுந்தொலைவிற்கு நடந்தும், ஊர்ந்தும் சென்றார். தாங்கள் இறப்பது உறுதி என்ற நிலைக்கு ஆட்பட்டனர். ஆராய்ச்சிக்குறிப்புகளைத் தகுந்த பாதுகாப்பான முறையில் வைத்துவிட்டார் எரிக்ஸன். பனிக்கட்டியின் மீது ஊர்ந்து சென்றார்.
நவம்பர் மாத பனியும், குளிரும் இவரை வாட்டியது. இறுதியில் பனிப்புயலில் சிக்கி உயிரைவிட்டார்.
ஒரு ஆண்டு சென்ற பிறகுதான் எரிக்ஸனது சடலமும், அவர் நண்பரது சடலமும் கிடைத்தன. இவருடைய ஆராய்ச்சிக் குறிப்புகளும் கிடைக்கப் பெற்றன.
மரணத்தை முக மலர்ச்சியுடன் வரவேற்ற அவருடைய இலட்சியத்தால்தான், சமுதாயம் அறியாமல் இருந்த நாடுகளைப் பற்றிய உண்மைகளை உணரமுடிந்தது.
ஒரு நாட்டைப்பற்றிய விவரங்களைத் தெரிந்து கொள்வதற்கு இவருடைய உயிரையே கொடுக்க வேண்டி இருந்த போதிலும் எரிக்ஸன் சோர்ந்துவிடவில்லை. தன்னுடைய உயிர் போனாலும் கவலைப்படாமல், தன்னுடைய இலட்சியம்தான் பெரியது என்று எண்ணிச் செயல்பட்ட எரிக்ஸனின் செயல்மிகவும் உயர்வானது.
விஞ்ஞான முறையில் ஆராய்ந்து முடிவுகள் புரட்சிகரமானவையாக இருந்தாலும் கூட, அக்காலத்திற்கு ஏற்றபடி இருந்த கருத்துகளுக்கு முரண்பட்டதாக அமைந்தாலும், அதற்காக விஞ்ஞானி தான் கண்டு அறிந்த உண்மைகளுக்காக உலகையே எதிர்த்துப் போராடவும் தயங்கியது இல்லை.
விஞ்ஞானி செய்யும் ஆராய்ச்சிகளாலும் வெளியிடும் கருத்துகளாலும், தங்களுடைய உயிருக்கு ஆபத்து ஏற்பட்டாலும், விஞ்ஞானி தான் மேற்கொண்ட இலட்சியத்தை எப்பொழுதும் விட்டுவிட மாட்டார்.
இலட்சியத்துடன் தொடங்கப்படும் எந்த செயலும் தோல்வி அடைந்ததாக வரலாறு இல்லை. இலட்சியம் தான் ஒரு செயலை உருவாக்கும். இது இல்லாவிட்டால் உலகத்தின் இயக்கமே இருக்காது.
இலட்சியத்துடன் செயல்பட்டால் எதிர்க்க வரும் எதுவும் இருக்கும் இடம் தெரியமால் ஓடிப்போய்விடும்.
வாழ்க்கை என்ற புத்தகத்தின் முதல் பக்கத்திலேயே நம்மிடம் இலட்சியம் இடம் பெற்றிருக்க வேண்டும். உயர்வான இலட்சியம் இருப்பது அவசியம்.
இலட்சியம் என்று ஒன்று இருந்தால் தான் வாழ்க்கை ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் சென்று கொண்டிருக்கும்.
இலட்சியத்தை நிறைவேற்றுவதற்குத் திடமான மனவலிமை வேண்டும். எவ்வளவு இடையூறு ஏற்பட்டாலும் இதனை விட்டுவிடக் கூடாது.
சில மதங்களில் துறவிகளாக வருவதற்குப் பயிற்சி பெறும்பொழுது தங்களுடைய இலட்சியத்திலிருந்து தவறாமல் இருக்கிறார்களா என்பதற்குப் பல சோதனைகளை வைப்பார்கள். அதனை வென்றால் தான் அவர்கள் துறவியாக முடியும்.
நம்முடைய வாழ்க்கையிலும் இலட்சியத்தை அடையும் பொழுது பல சோதனைகள் குறுக்கிடும். சோதனையில் துன்புறும் போது இலட்சியத்தை விட்டுவிடக் கூடாது.
இலட்சியத்தை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருந்தால் நம்முடைய வாழ்க்கை பயனற்றதாகிவிடும். சிறு துன்பத்திற்காக அஞ்சி தன் இலட்சியத்தை கைவிட்ட மனிதன், தானே பெருந்துன்பத்தைத் தழுவிக்கொள்கிறான் என்கிறார் அறிஞர் வில்லியம்ஸ்.
கை அளவு கொண்ட இதயத்தில் என்ன இலட்சியத்தை உருவாக்குகின்றதோ அதற்கேற்றபடிதான் வாழ்க்கை அமையும். இலட்சியம் என்ற பாகம் சரியாக இருந்தால் தான் உடல் என்ற இயந்திரம் சரியாக இயங்க முடியும்.
நாம் என்ன இலட்சியம் கொண்டு செயலாற்றி வருகிறோம் என்பதை நம்மை நாமே கேட்டுக் கொள்வோம். இதுவரை இலட்சியம் இல்லாமல் வாழ்ந்துவிட்டோம் என்பதனைப் புரிந்துகொள்ள முடியும். இனிமேலும் இந்தநிலை தொடர வேண்டாம்.
நாம் ஒரு இலட்சியத்தை மேற்கொள்வோம். அந்த இலட்சியத்தை முன் வைத்து செயலாற்றுவோம்.

பல்வேறு திறன்களை வளர்ப்போம்


Author: தி.க. சந்திரசேகரன்

தி.க. சந்திரசேகரன்
இரண்டு எருமைகள் ஒன்றோடொன்று மனம் விட்டுப் பேசிக்கொண்டிருந்தன.
” அதோ, தொலைவிலே ஓர் உருவம் நம்மை நோக்கி வருகிறதே, அதற்கு என்னவென்று பெயர்”.
” அதுவா, அதை மனிதன் என்று சொல்லுவார்கள்.”
” அப்படியா! அதைப்போய் எதற்குக் கடவுள் வீணாகப் படைத்தார்?”
” வேண்டாம் ! வேண்டாம்! நீ அப்படிச் சொல்லாதே! ஒருவகையில் அவன் வாழ்க்கை4க் குக்கூட ஒரு பொருள் இருக்கிறது.”
” எனக்குப் புரியவில்லை.”
” இதோ பார் ! நம்மால் புல்லைச் சாப்பிட முடியும். பிண்ணாக்கைச் சாப்பிட முடியும். இருந்தாலும் அந்தப் பிண்ணாக்கை உற்பத்தி செய்ய முடியுமா? முடியாது. ஆகவே, பிண்ணாக்கை உற்பத்தி செய்யவே கடவுளால் படைக்கப்பட்டவன் மனிதன்”.
” அப்புறம்!”
” உனக்கு முதுகில் அரிக்கிறது. என்ன செய்தாலும் உன்னால் சொறிந்துகொள்ள முடியாது. மனிதன்தான் சொறிந்துவிட வேண்டும்.”
” உம்”
” உனக்கு உடம்பு சரியில்லை. மருந்து கொடுக்க ஊசிபோட மருத்துவரிடம் அழைத்துப் போக இதோ, இந்த மனிதன் உதவுவான்.”
” அவ்வளவுதானா”
” இல்லை. உன் மடியில் பால் சேருகிறது. உன்னாலோ, என்னாலோ கறக்க முடியுமா?”
” முடியாது ”
” பாலை இந்த மனிதன்தான் கறக்க வேண்டும்.
”பிறகு”
” கொம்பு சீவி விடுவது. உடலின் மேலுள்ள உணியைப் பிடிப்பது… பண்டிகைக் காலங்களில் கொம்புக்கு வண்ணம் திட்டுவது, அலங்காரம் செய்வது, சந்தைக்குப் போய்ப் பருத்திக் கொட்டை, புளியம்பொட்டு, அகத்திக்கீரை வாங்குவது இப்படி எத்தனையோ வேலைகள்.”
” அடடா! இவ்வளவு வேலை செய்கிறானா மனிதன் பாவம்!”
” இதில் போய் என்ன பருவம் எருமைகள் மட்டும் இல்லையென்றால் மனிதர்களுக்குச் செய்வதற்கு வேலையே இருக்காது ! ஆகவே, உண்மையில் அவர்கள் நமக்குக் கடன்பட்டிருக்கிறார்கள்.”
” உண்மை! உண்மை!”
நண்பர்களே!
இரண்டு எருமைகளின் உரையாடல் கேட்டோம். கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால் அந்த உரையாடலில் உண்மை இருக்கத்தானே செய்கிறது.
எருமைக்ளுக்காக மனிதன் வாழ்வது போல் மற்றவர்களுக்காகவே வாழும் மனிதர்கள் ஏராளம்.
பெற்றவர்களுக்காக வாழும் பிள்ளைகள். கணவனுக்காகவே வாழும் மனைவி. முதலாளிக்காகவே உழைத்து வாழும் தொழிலாளி.
இப்படி வாழும் பலரைப் பார்க்கும்போது நம் மனத்தில் ஒரு கேள்வி எழாமல் இல்லை.
” இவங்களுக்கென ஆசாபாசங்கள் இல்லையா?”
இவர்களுக்கென்று ஒரு வாழ்க்கை வாழ்கை – ஓர் உலகம் இல்லையா? செக்குமாடுகள் போலச் சுழன்று சுழன்று கடைசி மூச்சு வரை உழன்று கொண்டிருப்பதுதான் வாழ்க்கையா?
” இதனால் பெற்றோரையோ, கணவனையோ, முதலாளியையோ அலட்சியம் செய்ய வேண்டுபம் என்று சொல்லிவில்லை. உங்கள் வாழ்க்கை என்ன ஆயிற்று? என்றுதான் கேட்கிறேன்.
வைன் டபிள்யூ டியர் என்ற எழுத்தாளர் தன்னுடைய புகழ்பெற்ற ஓரு நூலில் எழுதுகிறார்.
” உங்களுக்கு என்று இருப்பது ஒரு வாழ்க்கை. உங்கள் உடலுக்குள் வேறு ஒருவர் புகுந்து கொண்டு உங்களைப் போல சிந்திக்கவோ, உணரவோ முடியாது! நீங்கள் நீங்கள்தான்! ஏன் உங்கள் வாழ்க்கையை நீங்கள் வேறு சிலர் கையிலே ஒப்படைத்து விட்டு அவர்கள் இழுத்த இழுப்புக்கெல்லாம் ஈடுகொடுக்க வேண்டும். உங்களுடைய வாழ்க்கையை நீங்களே ஏன் முழுமையாக உங்கள் விருப்பப்டி வாழக் கூடாது?
ஆகவே, நம்முன் இப்போதுள்ள கேள்வி, ” நாம் ஏன் முழு வாழ்க்கை வாழக்கூடாது? நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை ஏன் ஒரு சாதனை நிறைந்த, சலசலப்பும், சலனமும் இல்லாத – மகிழ்ச்சியான – நிறைவான வாழ்க்கையை வாழக் கூடாது?”
‘ உங்களுக்குள் ஒளிந்திருக்கும் ஆற்றல்’ என்ற தலைப்பில் ஒரு பயிற்சியாளர் ஒரு குழுவிற்கு பயிற்சி அளித்து வந்தபோது, அவர்களிடம் ஒரு கேள்வி கேட்டார்.
” ஒரு செங்கலின் பயன் யாது?”
வந்த பதில்கள் :
கட்டடம் கட்ட,
யாரையாவது தாக்க,
பிள்ளையார் பந்து விளையாட,
மஞ்சள், குங்குமம் இட்டு கடக்கும் போது கால் வைக்க,
சின்ன நீரோடையை கடக்கும்போது கால் வைக்க
செங்கல் தூளில் பல் துலக்க,
தூளாக்கி மிளகாய்த் தூளில் கலப்படம் செய்ய,
சிறிய கல்லாக உடைத்து முட்டுக்கொடுக்க,
புடலங்காயில் கட்டி தொங்கிவிட,
பேப்பர் வெயிட் போல் பயன்படுத்த,
அடுப்பு தாயார்க்க,
தோட்டத்தில், பாதைகளில் எல்லையாக பதிக்க,
மரம் வளர்க்க,
செடி நடும்போது, சுற்றுத்தடிப்பு கட்ட,
இப்படி கிட்டத்தட்ட நாற்பது பதில்கள் வந்தன!
ஒரு சாதாரண, செங்கல்லே இத்தனை வேலைகளைச் செய்யும்போது, நம்மால் எவ்வளவு செய்ய முடியும்?
வாழ்க்கையில் நம் குறிக்கோள் என்ன?
எருமை மாட்டுக்கு பணிவிடை செய்ய மட்டுமா பிறந்திருக்கிறோம்?
நம்மால் நல்ல முடிவுகளை எடுக்கு முடியும். பேச்சாற்றாலை பெருக்கிக் கொள்ள முடியும். வாய்ப்பேச்சில் வீரராக மட்டுமின்று செயலில் திறமையையும் வெளிப்படுத்த முடியும்.

மாணவனே… வெற்றி மீது பற்று வை

வையத் தலைமை கொள்
ஒரு போரின் வெற்றிக்குப் படைவீரர்களை விட
படைத் தலைவனே முக்கியம்.
- நெப்போலியன்
நீ இன்றைய மாணவன், ஆனால் நாளைய விஞ்ஞானியாகவோ, மருத்துவராகவோ, பொறியாளராகவோ, தணிக்கையாளராகவோ, ஐ.ஏ.எஸ். அதிகாரியாகவோ வரக்கூடும். அப்போது தலைமை ஏற்பதற்கு இப்போதே தயாராக வேண்டும்.
தலைமைப் பண்பு என்றால் என்ன?
ஒரு நல்ல பொதுநோக்கத்திற்காக, ஒரு குழுவை வழி நடத்தும் பாங்கு தலைமைப் பண்பு எனலாம்.
உன்னுடைய தலைமைப் பண்புகளை இனங்கண்டு மெருகேற்றவேண்டும். பெற்றோர், ஆசிரியர்கள், நண்பர்கள் – இவர்கள் பொறுப்புகளைத் தரும்போது தட்டிக் கழிக்காதே வாய்ப்பாகக் கருதி ஏற்றுச் செயல்படு.
வகுப்புத் தலைவன், மாணவர் பேரவைத் தலைவன், NCC, NSS, Scout, TRC போன்ற அமைப்புகளில் உன்னை இணைத்துக் கொள்; இணைந்து செயல்படு; இணைத்து செயல்படு. நாளை நீ மாவட்ட ஆட்சியராக, காவல்துறைஆணையராக வருவதற்கு இவையெல்லாம் பயிற்சிகள், ஒத்திகைகள் என்பதை மனதில் வை.
நிமிர்ந்து நில்
இருக்கையில் அமரும்போது நிமிர்ந்து உட்கார்; நடக்கும்போதும் நிற்கும்போதும் நிமிர்ந்து நட; நிமிர்ந்து நில். உன் பார்வையில் கம்பீரமும் தெளிவும் இருக்கட்டும். இவை நான் வெல்லப் பிறந்தவன் என்னும் மனப்பாங்கை ஏற்படுத்தும். அதனால்தான் பாரதியார், நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை வேண்டும் என்றார்.
நிமிர்ந்து நிற்கையில் மனதில் தன்னம்பிக்கை மற்றும் மகிழ்ச்சி ஊற்றெடுப்பதை உணரலாம்.
கூனிக் குறுகி நின்றால், இவன் இலக்கு இல்லாத சோம்பேறி என்று நினைப்பார்கள்.
உன்னுடைய தோற்றத்தை வைத்தே உன்னை எடைபோடுவார்கள். தலைநிமிர்ந்து நிற்பதே தலைமைக்கு அழகு. உன் தோற்றப் பொலிவும், உன் உடல் உணர்த்தும் செய்தியும் பிறர் மதிப்பதாக, மகிழ்வதாக இருக்குமாறு எப்போதும் பார்த்துக் கொள்.
நாம் பிறரால் மதிக்கப்பட வேண்டும் என்று நினைக்கிறோம். ஆனால் நாம் எப்படி நடந்து கொள்கிறோம் என்பதைப் பொறுத்தே பிறர் நம்மை மதிப்பர். நாடகத்தில் கம்பீரமாக நடந்து வரும் இராஜாவைப் பார்த்து வியக்கிறோமே ஏன்? மற்றவர்களிடமிருந்து மாறுபட்ட நடை; வேறுபட்ட உடை. அது தான் காரணம். எனவே நீயும் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டு இருக்க வேண்டும். நூறு பேருக்கு நடுவே நின்றாலும் நீ அறியப்பட வேண்டும். உன்னுடைய இருப்பு மற்றவருக்குத் தெரிந்து கொண்டே இருக்க வேண்டும். பிறகு பார். நீ கொண்டாடப்படும் மனிதராக (Charismatic Personality) மதிக்கப்படுவாய். நீ தலைவனைப் போல மதிக்கப்பட வேண்டும் என நினைத்தால், தலைவனாகவே இரு.
நீ உயர்ந்து நிற்கிறாயா, தாழ்ந்து நிற்கிறாயா என்பதை உன் மனதிடம் கேள்; பெற்றோரிடம், நண்பரிடம், உறவினரிடம் கேள். பல்வேறு சமயங்களில் உன்னை ஒளிப்படம் எடுத்திருப்பார்கள். அவற்றைத் தொகுத்துப் பார். நீ நிற்கும் விதம், நடக்கும் விதம், உட்காரும் விதம் ஒரு தலைவனுக்கு உரியதாக இல்லை என்றால், அவற்றைமாற்றிக் கொள். மற்றவர்களுடைய கவனத்தை ஈர்க்கும் வண்ணம், மற்றவர்கள் உன்னை ஏற்கும் வண்ணம், மற்றவர்களிடத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் வண்ணம் உன் ஒவ்வொரு அசைவும் இருக்க வேண்டும். உன் ஒவ்வொரு செயலும் துணிவு, நேர்மை, அர்பணிப்பு, அறிவு, அன்பு இவற்றைப் பறைசாற்றவேண்டும். இந்த நிலைக்கு நீ உயர்ந்தால், பல நூறு இளைஞர்களுக்கு ஒரு முன் மாதிரியாக, நன்மாதிரியாக விளங்குவாய்.
சுவாமி விவேகானந்தரைப் பார்த்து ஒருவர் கேட்டார். “ஏன் நீங்கள் வித்தியாசமான மனிதராய்த் தெரிகிறீர்கள்?” அவர் திருப்பிக் கேட்டார். “ஏன் நீங்கள் எல்லோரும் ஒரே மாதிரியாகக் காணப்படுகிறீர்கள்?”
சுவாமி விவேகானந்தர் படத்தின் முன்னால் நின்று சற்று உற்றுப்பார். அவர் ஓங்கி உயர்ந்து கம்பீரமாக நிற்பதைப்பார். அவர் நிற்கும் விதமே அவர் குறிக்கோளைப் பறைசாற்றுகிறது. நம்முடைய பாரம்பரிய ஞானத்தைப் பற்றி பெருமை கொள்ளச் செய்தவர் அவர்தான். கருதிய செயல் கைகூடும் வரை விழிப்புடன் பணியாற்றுமாறு அறைகூவல் விடுத்தார்.
சுயமரியாதையையும், நாட்டுப்பற்றையும் நம் குருதியில் கலக்கச் செய்தார். 1893-ல் நடந்த சிகாகோ சர்வமத மாநாட்டில் ஆற்றிய எழுச்சி உரை உலகப்புகழ் வாய்ந்தது. அமெரிக்காவைச் சேர்ந்த என் சகோதரிகளே, சகோதரர்களே – என்ற அவரது தொடக்க வரி, அவரை புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றது. ஆம், அவர் எப்போதும் ஓங்கி உயர்ந்து நின்றார்; வென்றார்.
செல்வாக்கு
ஒருவனுடைய வெற்றியில் முக்கிய பங்கு வகிப்பது சொல்லும் திறன். வாயால் சொல்லுதலும், எழுத்தால் சொல்லுதலும் மிக முக்கியம். அதற்காக நீ ஒரு பெரிய பேச்சாளராகவோ, எழுத்தாளராகவோ இருக்க வேண்டியது அவசியமில்லை. குறைந்த அளவு நாம் சொல்ல நினைத்ததைப் பிறருக்குப் புரியும்படி சொல்லத் தெரிய வேண்டும். மொழி என்னும் ஊடகத்தை பேச்சிலும் எழுத்திலும் சரியாகப் பயன்படுத்தக் கற்றுக்கொள்ள வேண்டும். இத்தகைய திறமை இல்லாதவரை மணம் வீசாத காகித மலருக்கு ஒப்பிடுவார் திருவள்ளுவர்.
இணரூழ்த்தும் நாறா மலரனையர் கற்றது
உணர விரித்துரையா தார். (குறள் 650)
என்று உறைக்கும் படி உரைப்பார்.
எனவே சொல்லும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். தொடர்ந்து பயிற்சி செய்ய வேண்டும். உலகத்தின் எந்த மூலைக்கும் செல்ல வேண்டிய கட்டாயம் உனக்கு ஏற்படும். ஆங்கிலம் மற்றும் பிறமொழிகளில் தேர்ச்சி கொள்.
சொல்லும் திறன் மற்றும் செல்லும் திறன்
சொல்லும் திறன் இல்லாதவர்க்குச் செல்லுந்திறனும் இருக்காது. அவர் போடும் விண்ணப்பம் கூட உரிய செய்தியை சொல்லாது, எனவே செல்லாது.
கையெழுத்து
கட்டுரை எழுதுதல் என்பது ஒரு கலை; ஒரு திறன். பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் நீ பெற்றமதிப்பெண் எழுதும் திறனுக்குக் கிடைத்தது என்பதே உண்மை. IAS / IPS தேர்வில் கூட கட்டுரை வினாக்களை எப்படி எழுதுகிறோம் என்பதைப் பொறுத்து தான் வெற்றியும் தோல்வியும் உறுதியாகிறது.
எழுதும் திறனோடு கையெழுத்துத் தெளிவும் அழகும் முக்கியம். மோசமான கையெழுத்தில் என்னதான் சரியான விடையை எழுதினாலும் திருத்தும் ஆசிரியரால் சரியாகப் புரிந்து கொள்ள முடியாது. என்னதான் கணினியுகம் என்றாலும், எழுத்துமுறைதேர்வுகள் இருக்கும் வரையிலும் அழகான கையெழுத்து அவசியமே. எனவே நீ ஏதாவது குறுகியகால கையெழுத்துப் பயிற்சி இருந்தால், அதில் சேர்ந்து பயிற்சி பெறுவது நன்று.
முனைவர் செ. சைலேந்திர பாபு, ஐ.பி.எஸ்.
Author: முனைவர் செ. சைலேந்திர பாபு, ஐ.பி.எஸ்.
தொடர்ச்சி அடுத்த இதழில்…….
“Be Ambitions Boys and Girls” ஆங்கில நூலிலிருந்து தமிழாக்கம்
- திரு.கோவிந்தராஜன்