Friday, July 22, 2011

வெற்றி என்பது யார்கையில்

வெற்றி என்பது யார்கையில்
விவேகம் என்பது எத்துறையில்
பற்றித் துணிந்து செய்தாலே
பறந்து வருமே நம்பிக்கை

வெட்டி விட்டால் மரம் துளிர்க்கும்
விவேகம் வைத்தால் வெற்றிவரும்
துட்டிற்காக ஆசை வைத்தால்
தொடர்ந்து தூய்மை வெளியேறும்


தோல்வி வந்தால் துவளாமல்
தொடர்ந்து முயன்றால் வெற்றிவரும்
ஆல்போல் நெஞ்சம் உறுதி கொண்டால்
அனைத்தும் நமது கைக்குவரும்


கிடைக்கும் என்றநம்பிக்கை
கீழே விழுந்தும் துணிந்தெழுந்தால்
படைக்கும் ஆற்றல் கைக் கொண்டால்
பாரே நம்மைப் பாராட்டும்.


முயன்று முயன்று சாதித்து
முத்திரை ஒன்றினை நாம்பதித்தால்
வியந்து வருமே வெற்றியது
வெல்லும் ‘தன்னம்பிக்கை’ ஒன்றேதான்!


- கவிஞர் பொன். கிருட்டிணன்
தாரமங்கலம், சேலம்.

0 comments:

Post a Comment