This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Wednesday, October 26, 2011

போர் தொடு

முனைவர் செ. சைலேந்திர பாபு, ஐ.பி.எஸ்.
உன்னுள்ளே அல்லது வெளியே இருக்கும் எதிரிகளை இனங்கண்ட பின்னரும் சும்மாயிருக்கலாமா? உடனே செயல்படுங்கள்.
உன் நண்பனே உன் எதிரி
உன் வகுப்பில் உன்னோடு படிக்கும் சில நண்பர்கள் – உன்னைப் புகைக்க அழைப்பார்கள். இப்போது சொல் அவர்கள் உன் எதிரிகள் தானே?
இவர்களில் சிலர் மனதளவில் ஆர்வத்தைக் குலைப்பார்கள். இரண்டு மடங்கு ஆர்வத்தோடு படிப்பது தான் நீ இவர்களுக்குக் கொடுக்கும் பதிலடியாகும்.
சிலர் வகுப்புக்கு அல்லது பள்ளிக்கு வெளியே சண்டைக்கு இழுப்பார்கள். இவரோடு நேரடியாக மோதாதே. பழிக்குப் பழி என்றபோக்குத் தவறானது. என் கண்ணைக் குத்தினான். எனவே அவன் கண்ணைக் குத்தினேன் என்று இருவரும் குருடாகலாமா?
தாக்க வந்தால் பொறுமையாயிரு. உடனே தலைமையாசிரியரிடம் சொல். அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். ஒருபோதும் சட்டத்தை நீ கையில் எடுக்காதே.
கழுத்தைப் பிடித்து நெருக்கினால் பொறுமையாய் இருக்காதே. திருப்பித்தாக்கு. நமது உயிரை நாம்தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அதற்கான உரிமை (Right of Private Defense) நமக்குள்ளளது.
எனக்கும் இப்படிப் பட்ட நண்பர்கள் இருந்தார்கள். கொஞ்சம் சண்டையும் போட்டேன். பிறகு ஞானோதயம் வந்தது. அவர்களை ஒதுக்கி விட்டு, படிப்பில் இரண்டு மடங்குஆர்வம் காட்டினேன். அவர்கள் இன்றும் சிட்டுக் குருவிகளாக – ஆட்டோ ஓட்டுநராக, ஆட்டோ பழுதுநீக்குபவர்களாக இருக்கிறார்கள். நான் மேகங்களின் மேலே பறக்கும் பருந்தாக – காவல்துறை உயர் அதிகாரியாக வலம் வருகிறேன். இப்போது அவர்கள் என்னிடம் உதவி கேட்டு வருகிறார்கள். பள்ளியில் படிக்கும் போது நான்தான் அவர்களுடைய சிறந்த நண்பன் என இப்போது சொல்கிறார்கள்.
எனவே தீய நண்பர்களோடு சேராதே. அவர்களுடைய சொல்லுக்கு செவி சாய்க்க வேண்டாம். அவர்களைப் பழிதீர்த்துக் கொள்ள ஒரே வழி – இரு மடங்கு வெறித்தனத்தோடு படிப்பது தான். இதுதான் நான் சென்றவழி, உனக்கு சொல்லும் வழி; எதிரிகளை வெல்லும் வழி.
உனக்குள்ளே எத்தனை எதிரிகள்
உனக்குள்ளேயே இருக்கும் எதிரியைச் சமாளிப்பது சற்று கடினம்தான். அதற்கு அதீத துணிச்சலும், மிகுந்த கட்டுப்பாடும் வேண்டும். கூடுதலாக நிறைய சுயபரிசோதனை செய்ய வேண்டும்.
உன் நண்பன் உன்னை புகைப்பிடிக்கச் சொல்கிறான். சரி எனத் தலையாட்டும் முன் – கை நீட்டும் முன், ஒரு கேள்வி கேள்.
நான் புகைப்பதை என் தாய் விரும்புவாளா? நான் புகைப்பதைப் பார்த்தால் ஏற்றுக் கொள்வாளா?
தாய் விரும்பாத ஒன்றை, நீயும் விரும்பாதே, விட்டொழி. ஒரு எதிரியை வீழ்த்தியாயிற்று.
முதல் மதிப்பெண் பெறுகிறான் உன் நண்பன். அவனைப் பார்த்து உனக்கேன் பொறாமை? அவன் முதல் மதிப்பெண் பெற விலையாகக் கொடுத்தது அவனது வியர்வை. அதை உணராமல், பொறாமைப்படுவது, அவனைப் பற்றியே எண்ணிக் கொண்டிருப்பது காலவிரயம். அவனைப் போல் நானும் உழைப்பேன். மதிப்பெண் பெறுவேன் என்று எண்ணி பொறாமை என்னும் எதிரியை வீழ்த்து.
உன் செயல்பாட்டுக்கு உன் உடலே தடையாக இருக்கலாமா? கூடுதல் எடையா? கூடுதல் விழிப்புணர்வு தேவை.
‘ஊனினை உருக்கி உள்ளொளிப் பெருக்கு’ என்று கூறினர் நம் முன்னோர். உண்பதைக் குறை ஆனால் மனதில் உறுதி வேண்டும். வருத்த வேர்க் கடலையைக் கைநிறைய கொடுத்தாலும் ஒன்றை மட்டும் கொரித்து விட்டுப் போதும் எனச் சொல்லும்
மன உறுதி வேண்டும்.
பீசா, பர்கர் போன்றவற்றை உண்பதை நீக்கி, காய்களையும் கனிகளையும் உண்டால், பாரதியார் விரும்பியவாறு வாள் கொண்டு பிளந்தாலும் கட்டு மாறாத உடல் கிடைக்குமே.
தினமும் உடற்பயிற்சி செய்க. அல்லது வாரத்தில் மூன்று நாள்களாவது ஓட்டம், நீச்சல், சைக்கிள் ஓட்டுதல் என்பதை வழக்கப்படுத்திக் கொள். எடை குறைந்து, நடையில் மிடுக்கு ஏற்படும். தோற்றப் பொலிவு உண்டாகும். உனக்குள் நம்பிக்கையும் உற்சாகமும் ஒருசேர ஊற்றெடுக்கும். மிதமான உணவும் முறையான உடற்பயிற்சியும் மருத்துவ செலவைப் பாதியாய் குறைக்கும். ஆம். உடற்பயிற்சி ஒரு தவம். அதன் பயன் உடல் நலம் என்னும் வரம்.
இந்த நல்ல செய்தியை உன் பெற்றோருக்கும் சொல்.
நம் அக எதிரிகள் மற்றும் புற எதிரிகளுக்கான போரை நிறுத்தவே கூடாது. வாழும் வரை இப்போரைத் தொடருவோம்.
சர்.சி.வி. இராமன் (1888 – 1970)
சர் சந்திரசேகர வெங்கட்ராமன் திருச்சியில் பிறந்து, ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் வளர்ந்தார். தந்தையார் ஒரு பேராசிரியர் என்பதால், இராமனின் கல்விச்சூழல் நன்றாக இருந்தது.
சென்னை மாநிலக் கல்லூரியில் 1905-ம் ஆண்டு இயற்பியல் தங்கப் பதக்கத்துடன் கூடிய பட்டம் பெற்றார். 1907ல் சிறப்புத் தேர்ச்சியுடன் கூடிய முதுநிலைப் பட்டம் வென்றார். சிறிது காலம் அரசுத்துறை நிதிக் கணக்காயராக இருந்து விட்டு, 1917ல் கல்கத்தா பல்கலைக் கழகத்தில் இயற்பியல் பேராசிரியராகப் பணியைத் தொடங்கினார். கற்பித்தல் பணியோடு ஆய்வுப் பணியையும் மேற்கொண்ட இராமன், 1928ல் ஒளி விலகலை ஆராய்ந்து இராமன் விளைவு என்னும் புதிய கோட்பாட்டைக் கண்டுபிடித்தார். தொடர்ந்து ஆய்வு செய்து 1930ல் இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்றார். வெள்ளையரல்லாத ஒருவர் அறிவியல் நோபல் பரிசு பெற்றார் என்னும் பெருமை அவருக்கே உரித்தாயிற்று. பின்னர் பெங்களூர் இந்திய அறிவியல் கழகத்தின் இயக்குநர் ஆனார்.
இவருடைய வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வை டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் நினைவு கூர்கிறார்.
26.01.1954 அன்று உங்களுக்கு இந்திய அரசு மிக உயரிய பாரத ரத்னா விருதை வழங்க உள்ளது. முன்னதாகவே வந்து என் விருந்தினராக தங்க வேண்டும் – இப்படி ஒரு மடல் குடியரசுத் தலைவர் டாக்டர். ராஜேந்திர பிரசாத் அவர்களிடமிருந்து வந்தபோது, இராமன் அவர்கள் பணிவோடு மறுமொழி விடுத்தார்.
மன்னிக்க வேண்டும். என்னுடைய மாணவர் ஒருவர் பிஎச்.டி. ஆய்வேட்டை என் வழிகாட்டல் முடிக்கும் தருவாயில் உள்ளார். உடனிருந்து அவருக்கு உதவ வேண்டிய நிலையில் உள்ளேன். எனவே உங்கள் விருந்தோம்பலை ஏற்க முடியாத நிலை.
விருது வழங்கும் விழா அன்று தான் டெல் சென்றார். விருது பெற்றகையோடு பெங்களூருக்கு விரைந்தார். குறிப்பிட்ட நாளில் தன் மாணவர் பிஎச்.டி. ஆய்வேட்டை சமர்ப்பிக்க உதவினார்.
விழா விருந்து முதயவற்றை விட கடமைதான் முக்கியம் என்று கருதினார். இந்த உணர்வுமிக்க ஆசிரியப்படை உருவானால், ஆயிரமாயிரம் அறிவியல் மேதைகளை, கண்டுபிடிப்பாளர்களை இன்றும் நம் நாட்டில் உருவாக்க முடியும்.
இப்போது புரிகிறதா? இந்தக் கடமை உணர்வு யாருக்கு வரும்? தமக்கு உள்ளேயும், வெளியேயும் உள்ள எதிரிகளை வென்றவர்களுக்கு மட்டுமே சாத்தியமாகும் – இது சத்தியமாகும்.
முனைவர் சி. சைலேந்திரபாபு ஐ.பி.எஸ். அவர்களின் ஆர்ஹ்ள் ஹய்க் எண்ழ்ப்ள் ” Boys and Girls “Be Ambitions”" ஆங்கில நூலிலிருந்து தமிழாக்கம் முனைவர் “இனியன்’
திரு. கோவிந்தராஜூ

பல்வேறு திறன்களை வளர்ப்போம்





இரண்டு எருமைகள் ஒன்றோடொன்று மனம் விட்டுப் பேசிக்கொண்டிருந்தன.
” அதோ, தொலைவிலே ஓர் உருவம் நம்மை நோக்கி வருகிறதே, அதற்கு என்னவென்று பெயர்”.
” அதுவா, அதை மனிதன் என்று சொல்லுவார்கள்.”
” அப்படியா! அதைப்போய் எதற்குக் கடவுள் வீணாகப் படைத்தார்?”
” வேண்டாம் ! வேண்டாம்! நீ அப்படிச் சொல்லாதே! ஒருவகையில் அவன் வாழ்க்கை4க் குக்கூட ஒரு பொருள் இருக்கிறது.”
” எனக்குப் புரியவில்லை.”
” இதோ பார் ! நம்மால் புல்லைச் சாப்பிட முடியும். பிண்ணாக்கைச் சாப்பிட முடியும். இருந்தாலும் அந்தப் பிண்ணாக்கை உற்பத்தி செய்ய முடியுமா? முடியாது. ஆகவே, பிண்ணாக்கை உற்பத்தி செய்யவே கடவுளால் படைக்கப்பட்டவன் மனிதன்”.
” அப்புறம்!”
” உனக்கு முதுகில் அரிக்கிறது. என்ன செய்தாலும் உன்னால் சொறிந்துகொள்ள முடியாது. மனிதன்தான் சொறிந்துவிட வேண்டும்.”
” உம்”
” உனக்கு உடம்பு சரியில்லை. மருந்து கொடுக்க ஊசிபோட மருத்துவரிடம் அழைத்துப் போக இதோ, இந்த மனிதன் உதவுவான்.”
” அவ்வளவுதானா”
” இல்லை. உன் மடியில் பால் சேருகிறது. உன்னாலோ, என்னாலோ கறக்க முடியுமா?”
” முடியாது ”
” பாலை இந்த மனிதன்தான் கறக்க வேண்டும்.
”பிறகு”
” கொம்பு சீவி விடுவது. உடலின் மேலுள்ள உணியைப் பிடிப்பது… பண்டிகைக் காலங்களில் கொம்புக்கு வண்ணம் திட்டுவது, அலங்காரம் செய்வது, சந்தைக்குப் போய்ப் பருத்திக் கொட்டை, புளியம்பொட்டு, அகத்திக்கீரை வாங்குவது இப்படி எத்தனையோ வேலைகள்.”
” அடடா! இவ்வளவு வேலை செய்கிறானா மனிதன் பாவம்!”
” இதில் போய் என்ன பருவம் எருமைகள் மட்டும் இல்லையென்றால் மனிதர்களுக்குச் செய்வதற்கு வேலையே இருக்காது ! ஆகவே, உண்மையில் அவர்கள் நமக்குக் கடன்பட்டிருக்கிறார்கள்.”
” உண்மை! உண்மை!”
நண்பர்களே!
இரண்டு எருமைகளின் உரையாடல் கேட்டோம். கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால் அந்த உரையாடலில் உண்மை இருக்கத்தானே செய்கிறது.
எருமைக்ளுக்காக மனிதன் வாழ்வது போல் மற்றவர்களுக்காகவே வாழும் மனிதர்கள் ஏராளம்.
பெற்றவர்களுக்காக வாழும் பிள்ளைகள். கணவனுக்காகவே வாழும் மனைவி. முதலாளிக்காகவே உழைத்து வாழும் தொழிலாளி.
இப்படி வாழும் பலரைப் பார்க்கும்போது நம் மனத்தில் ஒரு கேள்வி எழாமல் இல்லை.
” இவங்களுக்கென ஆசாபாசங்கள் இல்லையா?”
இவர்களுக்கென்று ஒரு வாழ்க்கை வாழ்கை – ஓர் உலகம் இல்லையா? செக்குமாடுகள் போலச் சுழன்று சுழன்று கடைசி மூச்சு வரை உழன்று கொண்டிருப்பதுதான் வாழ்க்கையா?
” இதனால் பெற்றோரையோ, கணவனையோ, முதலாளியையோ அலட்சியம் செய்ய வேண்டுபம் என்று சொல்லிவில்லை. உங்கள் வாழ்க்கை என்ன ஆயிற்று? என்றுதான் கேட்கிறேன்.
வைன் டபிள்யூ டியர் என்ற எழுத்தாளர் தன்னுடைய புகழ்பெற்ற ஓரு நூலில் எழுதுகிறார்.
” உங்களுக்கு என்று இருப்பது ஒரு வாழ்க்கை. உங்கள் உடலுக்குள் வேறு ஒருவர் புகுந்து கொண்டு உங்களைப் போல சிந்திக்கவோ, உணரவோ முடியாது! நீங்கள் நீங்கள்தான்! ஏன் உங்கள் வாழ்க்கையை நீங்கள் வேறு சிலர் கையிலே ஒப்படைத்து விட்டு அவர்கள் இழுத்த இழுப்புக்கெல்லாம் ஈடுகொடுக்க வேண்டும். உங்களுடைய வாழ்க்கையை நீங்களே ஏன் முழுமையாக உங்கள் விருப்பப்டி வாழக் கூடாது?
ஆகவே, நம்முன் இப்போதுள்ள கேள்வி, ” நாம் ஏன் முழு வாழ்க்கை வாழக்கூடாது? நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை ஏன் ஒரு சாதனை நிறைந்த, சலசலப்பும், சலனமும் இல்லாத – மகிழ்ச்சியான – நிறைவான வாழ்க்கையை வாழக் கூடாது?”
‘ உங்களுக்குள் ஒளிந்திருக்கும் ஆற்றல்’ என்ற தலைப்பில் ஒரு பயிற்சியாளர் ஒரு குழுவிற்கு பயிற்சி அளித்து வந்தபோது, அவர்களிடம் ஒரு கேள்வி கேட்டார்.
” ஒரு செங்கலின் பயன் யாது?”
வந்த பதில்கள் :
கட்டடம் கட்ட,
யாரையாவது தாக்க,
பிள்ளையார் பந்து விளையாட,
மஞ்சள், குங்குமம் இட்டு கடக்கும் போது கால் வைக்க,
சின்ன நீரோடையை கடக்கும்போது கால் வைக்க
செங்கல் தூளில் பல் துலக்க,
தூளாக்கி மிளகாய்த் தூளில் கலப்படம் செய்ய,
சிறிய கல்லாக உடைத்து முட்டுக்கொடுக்க,
புடலங்காயில் கட்டி தொங்கிவிட,
பேப்பர் வெயிட் போல் பயன்படுத்த,
அடுப்பு தாயார்க்க,
தோட்டத்தில், பாதைகளில் எல்லையாக பதிக்க,
மரம் வளர்க்க,
செடி நடும்போது, சுற்றுத்தடிப்பு கட்ட,
இப்படி கிட்டத்தட்ட நாற்பது பதில்கள் வந்தன!
ஒரு சாதாரண, செங்கல்லே இத்தனை வேலைகளைச் செய்யும்போது, நம்மால் எவ்வளவு செய்ய முடியும்?
வாழ்க்கையில் நம் குறிக்கோள் என்ன?
எருமை மாட்டுக்கு பணிவிடை செய்ய மட்டுமா பிறந்திருக்கிறோம்?
நம்மால் நல்ல முடிவுகளை எடுக்கு முடியும். பேச்சாற்றாலை பெருக்கிக் கொள்ள முடியும். வாய்ப்பேச்சில் வீரராக மட்டுமின்று செயலில் திறமையையும் வெளிப்படுத்த முடியும்.

Author: தி.க. சந்திரசேகரன்

வெற்றிகொள்.


எதையும் அலட்சியம் செய்யாதே
எல்லாம் உனக்கு சாத்தியமாகம்
எதிலும் விரைந்து செயல்பட்டால்
ஏற்றம் பெறுவது உறுதியாகும்!
உச்சியைத் தொட்டு கீழே பார்த்தால்
உனக்கு தெரிவதெல்லாம் சிறிதாகும்
உயராது துவண்டு நின்றால் இங்கே
உனக்கு எல்லாம் அரிதாகும்!
எதையும் தாங்கும் இதயத்தை
எப்போதும் துணையாய் வைத்துக்கொள்
எதற்கும் துணிந்து முடிவுசெய்து
எதையும் எதிர்த்து வெற்றிகொள்!
-கவிஞர். விஜயபாரதி, மங்கலம்

Author: கவிஞர். விஜயபாரதி

சிறகை விரி….


சிறகுகளை விரித்தால்
வானில் வளம் வர முடியும் என்ற
தன்னம்பிக்கை இருப்பதால்
பறவைகள் வானில்
வலம் வருகிறது.

எல்லாத் திறமைகள் இருந்தும்
தன்னம்பிக்கைச் சிறகை
விரிக்கத் தயங்கும்
நண்பனே!
சிறகை விரி…

வானம் உனக்கு
விளையாட்டு அரங்கமாய்
மாறிவிடும்….
அப்புறமென்ன
இந்த உலகமே
உன் மென்மையான
இறக்கைகளின் கீழ்….

முயன்று பார்
உன்னால் முடியாதது
ஏதுமில்லை..
ம்… தொடங்கு….
-கவிஞர் :-R. ஆண்ட்ரூஸ் விஜயகுமார் M.A., M. Phil.,

Saturday, October 22, 2011

எதிலும் வெற்றி பெறுங்கள்


ஆங்கில புதுவருடம் பிறந்தது. தமிழ் புத்தாண்டும் பிறந்துள்ளது. நம் மனதிற்குள்ளும் புதிய சிந்தனைகளும் புதிய கோணத்தில் பிறந்து வாழ்க்கையில் புதிய சாதனைகளை படைக்க இருக்கும் வருடமாக தொடர வாழ்த்துக்கள். தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற பழமொழி பிறந்து எத்தனை வருடங்களோ? ஆனால் தை மாதம் வழிபிறக்கும் மாதம் தான். நமக்கு வலிமை பிறக்கும் வெற்றி மாதமாக இருக்கட்டும். வெற்றி வெற்றி என்று சொல்லுகிறோம் வெற்றியின் உண்மையான அர்த்தம் என்னவென்றால் நாம் விரும்புவதை விரும்புகிற நேரத்தில் விரும்புகிற வகையில் அடைவது தான் வெற்றி. எனக்கு தன்னம்பிக்கை புத்தகத்தில் அட்டைப்படத்தில் எனது புகைப் படம் வர வேண்டும். அந்த அளவிற்கு எனது முன்னேற்றமும் புகழும் எனது செயல்பாடுகளும் இருக்க வேண்டும் என்று விரும்புவதாக வைத்துக்கொண்டால் அது நடக்கும் போது தான் எனக்கு வெற்றி. வெற்றி என்பது ஒருவருக்கு ஒருவர் மாறுபடும். ஆனால் விரும்புவதை அடையும் போது எல்லாமே வெற்றி தான். ஆனால் அதில் சமுதாய சீர்கேடு தீமைவராமல் கவனித்துக் கொள்வது நமது கடமை.
படித்த விசயத்தை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.
உருளைக்கிழங்கு சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு அவைகளை அளவுவாரியாக பிரித்து லாரியில் அடுக்கி சந்தைக்கு எடுத்து செல்வதில் அதற்கான கூலி, சிரமம் இவற்றோடு கொண்டு செல்லும் கரடு முரடான பாதை பெரிய சவாலாக இருந்தது. குண்டும் குழியுமான பாதையில் வகைப்படுத்திய உருளைக்கிழங்குகள் சந்தைக்கு செல்வதற்குள் கலந்து விடுவதால் வகைவாரியாக விற்பதில் திணறினார்கள். ஒருவர் மட்டும் இதற்கெல்லாம் கவலைப்படவில்லை. விற்பனையில் தோற்கவில்லை. அவரை அணுகிய மற்ற விவசாயிகள் ஆச்சரியத்துடன் அதன் ரகசியம் என்ன என்று கேட்டனர். அவர் சொன்னார், ”இது மிகவும் சுலபமானது. நான் வகைவாரியாக லாரியில் அடுக்குவதில்லை. எல்லாவற்றையும் ஏற்றிக்கொண்டு கரடு முரடான பாதையில் செல்லும்போது குழுங்கி குழுங்கி லாரியின் அடிப்பகுதிக்கு சிறிய அளவு உருளைக்கிழங்குகள் வந்து விடுகின்றன. மத்தியில் நடுத்தரமான அளவுள்ள உருளைக்கிழங்குகளும் மேற்பகுதிக்கு பெரிய அளவுள்ள உருளைக் கிழங்குகளும் சந்தை செல்வதற்குள் வந்து விடுகின்றன. எனக்கு அளவு வாரியாக பிரிக்க வேண்டிய தேவையும் இல்லை கூலியும் இல்லை. அதைவிட கரடு முரடான பாதையும் எனக்கு தடையாக இல்லை”. கேட்டதும் மற்ற விவசாயிகள் ஆச்சரியப்பட்டனர்.
வெற்றியாளர்கள் சாதாரணமானவர்கள் தான். ஆனால் வித்தியாசமான அணுகுமுறையை தனதாக்கி கொள்பவர்கள் என்பது எத்தனை உண்மையாகிறது பார்த்தீர்களா?
கடினமான பாதையில் பெரிய உருளைக் கிழங்குகள் மட்டும் மேலே வருவ தில்லை. வெற்றியாளர்களும்தான். ஒவ்வொரு வெற்றி யாளர்களின் கடந்துவந்த பாதை கடினமாகத் தான் இருந்திருக்கும். உங்கள் வாழ்க்கை பாதை கடினமானதாக இருக்கிறது போலத் தோன்றி னால், கவலைப்படாதீர்கள். நீங்கள் வெற்றியை நோக்கி பயணிக்கிறீர்கள் என்று அர்த்தப்படுத்திக் கொண்டு விரையுங்கள். விட்டு விலகாதீர்கள்.
நம் பலவீனம்கூட பலமாக மாறிட சாத்தியமிருக்கிறது என எண்ணும்போது இந்த கதை ஞாபகத்திற்கு வருகிறது. கார் விபத்தில் தனது இடது கையை இழந்த ஒரு சிறுவன் ஜூடோ கற்றுக்கொள்ள ஒரு குருவை அணுகி தன் விருப்பத்தை தெரிவித்தான். அவனது ஆர்வத்தைக் கண்ட குரு அவனுக்கு அந்த கலையைக் கற்றுக்கொடுக்க சம்மதித்தார். ஒருமாதம் முழுவதும் ஒரு பாடத்தை மட்டுமே கற்றுக்கொடுத்தார். மாதங்கள் சில கழிந்தன. ஆனால் பாடம் என்னவோ முதல் கற்றுக் கொடுத்தது மட்டுமே. ஏன் எனக்கு வேறு பாடம் சொல்லித் தரவில்லை எனக் கேட்டான். அதற்கு குரு, ”தற்போது கற்றுக்கொண்டதை நன்றாக கற்றுக்கொண்டுள்ளாய். அதுவே உன் தேவையை பூர்த்தி செய்யும்”, என்றார். சிறிது வருத்தமாக இருந்தாலும் குரு சொன்ன வார்த்தைகளில் நம்பிக்கை கொண்டான். ஒருநாள் ஜூடோ போட்டிக்கு அழைத்துச் சென்று கலந்து கொள்ள வைத்தார்.
முதல் இரண்டு போட்டிகளில் வெற்றிப் பெற்றான். மூன்றாவது சற்று கடினமானதாக இருந்தாலும் அவனே வென்றான். அவனுக்கே ஆச்சரியம். கடைசி போட்டி. இம்முறை எதிராளி பெரிய வலிமை பொருந்திய அனுபவச்சாலி. போட்டி ஆரம்பித்த சில நேரத்தில் அச்சிறுவன் எதிராளியால் பலமாக தாக்கப்பட்டான். இடைவேளை தருணத்திலே போட்டியை நிறுத்தி விடலாம் இனி அந்த சிறுவனால் எதிர்கொள்ள முடியாது என முடிவெடுக்கும் தருவாயில் குரு குறுக்கிட்டு அவனை போட்டிக்கு அனுமதி யுங்கள் என சொன்னதை ஏற்றுக்கொண்டதால் போட்டி மறுபடியும் தொடர்ந்தது. சிறுவனின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் முடிவில் எதிராளி தோற்றான். சிறுவன் ”சாம்பியன்” பட்டத்தை வென்றான்.
வீடு திரும்பும் போது அச்சிறுவன் குருவை நோக்கி, ”இடதுகை இழந்த என்னால் எப்படி பலமிக்க எதிராளியை வெல்ல முடிந்தது,” என்றான். குரு சொன்னார், நீ இரண்டு காரணங்களுக்காக வெற்றி பெறமுடிந்தது. ஒன்று; நீ கற்றுக்கொண்ட பாடம் ஜூடோவில் மிகவும் கடினமான பகுதி. அதை திரும்ப திரும்ப பயிற்சி செய்து நன்கு தேர்ச்சி பெற்றிருந்தாய். இரண்டு; அந்த பாடத்தை பயன்படுத்தி தாக்கும் போது தாக்குபவரின் இடதுகையை மடக்கி பிடித்தால் மட்டுமே தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியும். உனக்கு இடது கை இல்லாமல் இருந்ததால் அவனால் உன் தாக்குதல் இருந்து தப்பிக்க முடியாமல் தோற்றான்” என விளக்கமளித்தார்.
அச்சிறுவனின் பலவீனம் பலமாக சாத்தியமாகும் நிலை இருக்கும் போது நம் பலம் அறிந்து அதனை சரியாக பயன்படுத்தினால் ?!.
எங்கும் எதிலும் வெற்றி பெறலாம்.



Thanks :Author: 

மாற்றத்தின் மறுஉருவம் வெற்றி


முளைக்க மறுக்கும் விதை, உணவாக மறுக்கும் தானியங்கள், உருவாகாத கருமுட்டை, வளர மறுக்கும் கரு, உடல் மற்றும் மன ரீதியில் வளர மறுக்கும் மனிதன், வளர மறுக்கும் தாவரங்கள், விலங்குகள் இப்படி புதிய புதியதாக மாறமறுக்கும் உயிரினங்கள், பொருட்கள், செயல்கள் நிறைந்த உலகை நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாது. மாற்றம் இல்லாதஉலகம் (இதுவும் மாற்றத்தால் உருவானதுதான்) வாழ உகந்ததாக இருக்க முடியாது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த அத்தியாவசியமாக நடைபெறவேண்டிய மாற்றம் நம் மனதில் – மனப்பாங்கில் ஏற்பட நாம் மறுத்தால் எப்படி யிருக்கும். நாம் ஒவ்வொருவரும் ஒரு குட்டி உலகம். இந்த குட்டி உலகத்தில் மாற்றமில்லை எனில் வாழ முடியுமா? வாழ்க்கையில் சிறப்பு சேர்க்க முடியுமா? “இல்லை’ எனத் தொடங்கும் பதிலைத்தான் சொல்ல வேண்டி இருக்கும்.
மாற்றம் என்ற வார்த்தை மட்டுமே இவ்வுலகில் மாறாமல் இருப்பது எனச் சொல்வதுண்டு. மாற்ற மில்லா நம் குழந்தையை நினைத்துப் பாருங்கள். பூக்காத பூவைப் போல மணம் வீச மறுக்கும் மலரைப் போல அல்லவா இருக்கும். அவ்வாறு இருக்கும் சூழலைப் பெற்றவர்களுக்கு தெரியும் அதன் வலி. மாற்றம் கட்டாயம் செயல் படுத்த வேண்டிய கட்டாய கடமை என்று அதனை செம்மையாக செயல்படுத்த வேண்டும்.
மாற்றம் என்ற சொல்லை வைத்தே சற்று வித்தியாசமாக மாற்றத்தின் வலிமையை விளக்கலாம். மாற்றம் என்ற சொல்லில் ஆரம்பத்திலேயே ஏதாவது மாற்றத்தை நாமே ஏற்படுத்தினால் (ஏமாற்றம்) ஏற்றம் என்ற நேர்மறையான வெற்றி கரமான சொல் கிடைக்கும். மாற்றத்தை நாம் செய்யாவிடில் ஏதாவது தானாகவே மாறாத மாற்றத்தில் ஒட்டிக்கொள்ளும் (ஏமாற்றம்). பிறகென்ன ஏமாற்றம் என்ற எதிர்மறையான சொல் உருவாகக்கூடும். அதனால் நாமாகவே முந்திக்கொண்டு வெற்றிக்குத் தேவையான உருமாற்றத்தை ஏற்படுத்துவோம். ஏமாற்றத்தை தவிர்ப்போம்.
என்னை யாரென்று நினைத்தீர்கள், யார் எதனைச் சொன்னாலும் நான் மாறமாட்டேன். என்னை மாற்ற யாராலும் முடியாது இப்படி பேசி தங்களது மனப்பாங்கினை மாற்றிக் கொள்ளாதவர்களின் நிலை என்னவாக இருக்கும்; அவர்களது எதிர்காலம் எப்படி இருக்கும்? மாற்றம் ஏற்றத்தின் வழிமுறை. மாறமறுத்தல் ஏமாற்றத்தின் ஏணி. ஏறுவது போல் தோன்றுமே தவிர முடிவு என்னவோ ஏமாற்றம் தான், அடுத்த நிலைக்கு நாமே ஒவ்வொரு மணித்துளியும் மாற ஒத்துழைப்பு தர வேண்டும். சுவாசக் காற்றை மாற்றுவது போல – உடலில் புதிய செயல்கள் உருவாகிக் கொண்டிருப்பது போல மாறுதல் நடந்து கொண்டே இருக்க வேண்டும். மாறமறுத்தால் உராய்வு – மன உராய்வு எதிர் மறையான மாற்றத்தை ஏற்க வேண்டிய கட்டாயத்திற்கு உட்படலாம். எனவே சூழலுக்கு தகுந்தவாறு நேர்மறையாக நம் மனப்பாங்கினை நாமே மாற்றிக்கொள்வோம். மாற்றமாகிய மரணத்தை மகிழ்ச்சி தரும் பிறப்பையும் மாறி மாறி ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கினை பெற்றுள்ள நம்மால் தேவைக்கு தகுந்தவாறு மற்ற தருணத்தில் நம் மனப்பாங்கினை மாற்றிக் கொள்ளவா முடியாது. நிச்சயம் நம்மால் முடியும். மாற்றத்தின் மறுஉருவம்தான் வெற்றி. தோல்வி என்ற நிலையில் மாற்றம் செய்தால் வெற்றி. வெற்றி என்ற நிலையில் மாற்றம் செய்தால் இன்னொன்று வெற்றி கிடைக்கும். ஆம். நண்பர்களே, மனப்பாங்கில் மாற்றம் செய்வோம் இன்னொரு வெற்றிக்காக….

Thanks :- ஆர். முருகேசன் M.A., M.Phil., Ph.D.,
மனநல ஆலோசகர், மனிதவள மேம்பாட்டுப் பயிற்சியாளர்

சவாலே சமாளி


விவரிக்க முடியல. என்னத்த சொல்ல     இந்த மனுசனிடம் எப்படி தான்         சமாளிக்கப்போறேனோ தெரியல.
…எதைப்பேசினாலும் நம் பலவீனத்தை தெரிந்து கொண்டு அதைப்பயன்படுத்தியே நம்மீது பாய்கிறார். என்ன செய்யறதுனே தெரியலை.

…என்ன! இந்த விஷயத்திற்கு இப்படி வெடித்து விழுகிறார். அப்பப்பா எப்படித்தான்
இந்த மனுசனோட குப்பைக் கொட்டறதோ போங்க.
…மனுசங்கிட்ட எதைப்பத்தியும் பேச முடியலை. எல்லாத்தையும் தெரிஞ்சு வெச்சுருக்கிறார். எப்படி சமாளிக்கிறது.
…அய்யோ அந்தாளா எல்லாம் தெரிஞ்ச மாதிரி பேசுவாரே. எப்படி சமாளிக்கப் போறேனே தெரியல.
…எதைச்சொன்னாலும் சரின்னு உடனே சொல்லு வாரே தவிர. ஒன்னும் அவரிடமிருந்து வராது.
…எதைச் சொன்னாலும் முதல்வேளையா அதைதள்ளிப் போடுவதுதான் முதல்வேலை. இவரிடம் இந்த விஷயத்தை எப்படி கொண்டுப் போகப்போறேனு தெரியலை.
…ஏம்பா அந்தாளிடமிருந்து எதையாவது புரிந்து கொள்ள முடிகிறது. என்ன நடக்குதுனே தெரியலயே?
…எதற்கெடுத்தாலும் இப்படி கத்துகிறாரே நம்மோட ஒத்துழைப்பார்னு நினைக்கறே?!
மேற்கண்டவற்றில் ஒன்று அல்லது அதற்கும் மேலானது உங்கள் புலம்பலாக இருக்க வைத்தவர்கள் இருந்தார்களா? இருக்கிறார்களா?
ஆமாங்க அதுக்கென்ன செய்யறது?… என்பது உங்கள் பதிலாக இருப்பின் இனிவருவது அப்படிப்பட்டவர்களை சமாளிக்க உதவும் என நம்புகிறேன்.
மேலே உள்ள அனுபவத்திற்கு காரணமாக உள்ளவர்கள் செயல் நடந்தேறனும், செயல் சரியா நடக்கனும், மற்றவர்களோடு சேர்ந்திருக்கனும், பாராட்டு கட்டாயம் இருக்க வேண்டும் போன்ற காரணங்களுக்காக நமக்கு சவாலாக இருக்கலாம். அவ்வாறு உள்ளவர்களின் எண்ணங்களை நிறைவேற்றும் வகையில் நம் பேச்சு, நடவடிக்கை இருக்கும் பட்சத்தில் நமக்கு சாதகமான வகையில் மாறிவிடுவார்கள்.
பிரச்சனை என்றாலே தீர்வு மறைக்கப் பட்டுள்ள தீர்வின் மறுவடிவம் தான். பிரச்சினை தீர்வின் வேஷம். வேஷம் கலைந்தால் தீர்வு தெரியும். விடைகிடைக்காத பிரச்சனை என நாம் நினைப்பது தீர்வை நோக்கிய வழியில் இருக்கிறோம் என்று அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டும். புதிர்வழி விளையாட்டில் சரியான வழி கண்டுபிடிப்பது போல பிரச்சனைக்குரிய மனிதர்கள் என்றால் அவர்களுக்கான தீர்வு அவர்களிடம் அல்லது நம்மிடம் கூட இருக்கலாம். போல்ட்-நட்டு உறவுப் போல இரண்டும் இணைந்து உரிய பயன்பெற வேண்டும். மாற்றம் எங்கு வேண்டுமோ அங்கு மாற்றிக்கொள்ள வேண்டியது அவசியம். பொதுவாகவே அது நமது பக்கம் தான் இருக்கும். நமது மாற்றம் அவர்களை மாற்றும் என்பது தான் உண்மை.
தீர்வுக்கான முதற்கட்டம் பிரச்சனையை அலசிப்பார்ப்பது. சும்மாவா சொன்னார்கள் குட்டையை குழப்பினால் கூட மீன் பிடிக்க முடியும் என்று.
பிரச்சனைக்குரியவர்கள் என்று நாம் நினைக்கும் தருணம் அவர்களைப் பற்றிய வேறுபாடுகளை மட்டுமே கவனத்தில் கொள்கிறோம். நம்மோடு அவர்களுக்குரிய ஒத்த குணங்களை நினைப்பது இல்லை. இதுவே அவர்கள் நமக்கு சவாலாக தோன்ற முதற்க் காரணம்.
சற்றுச்சிந்தித்துப் பாருங்கள். சவாலாக இருப்பவர்களின் நடவடிக்கைகளை வேறு கோணத்தில் நாம் புரிய வாய்ப்பு கிடைக்கும். ஒரு வேளை அதுவே விடையாகவும் இருக்கலாம். நமக்கு பிரச்சனைக்குரியவராக இருப்பவர் வேறுசிலருக்கு சாதகமாக சுமூகமான உறவுடன் பணியாற்றலாம். ஏன்? எப்படி? வேறுபாடு களுக்கும் ஒற்றுமைகளுக்கும் உள்ள இடைவெளி அதிகரிப்பு தான் காரணம். பல சமயங்கள் அவர்களது நடவடிக்கை நம்மை உதாசினப் படுத்துவதாக நினைத்துக் கொள் கிறோம். இங்கு எலினார் ரூஸ்வெல்ட் என்பவரின் வார்த்தை களை நினைவுக்கூற விரும்புகிறேன்.
“உங்களுடைய அனுமதியின்றி யாரும் உங்களை தரக்குறைவாக உணரவைக்க முடியாது”
மற்றவர்களுக்காக மாறுவது என்பது முகமாற்றம், உடல்மொழி, சொல்லும் விதம் இவற்றில் நாம் ஏற்படுத்தும் மாற்றம் அவர்களை நாம் சரியாக புரிந்து கொண்டோம் என்பதை அவர்களுக்கு உணர்த்தும். நியூட்டனின் மூன்றாம் விதி “ஒவ்வொரு செயலுக்கும் எதிர் செயல் உண்டு” என்பது போல இங்கு எதிரானவர்கள் என நாம் நினைத்திருப்பவர்களிடமிருந்து எதிர்க்காத செயல் நம்மை நோக்கி வருவதை உணரலாம்.
செயல்நடந்தேறனும் என்பதில் மட்டுமே முதற்க்கவனமாக இருப்பவர்களிடம் நாம் அதிகம் பேசாமல் இரத்தினச் சுருக்கமாக பேசவேண்டும். அவர்கள் செயல்வேகம் எதிர்ப்பார்ப்பவர்கள். எனவே நம் சுருக்கமான பேச்சு அவர்களுடைய நோக்கத்தை புரிந்து கொண்டு விட்டதாக உணர வைக்கும். அப்படி செய்வதால் உங்கள் சொற்களில் கவன ஈர்ப்பு ஏற்பட்டு உடன்பட்டு செயல் உருவாக வாய்ப்புண்டு.
செயல் சரியாக இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்துபவர்களிடம் கொஞ்சம் விபரமாக பேசுவது நல்லது. ஏனெனில் செயலைப்பற்றிய விபரம் கொடுப்பது செயலை சரியாக கையாள உதவுகிறார் என்பதை புரிந்து கொள்வார்கள். அதனால் அவர்களுடைய ஒத்துழைப்பு நமக்கு கிட்டும்.
எதைப்பற்றி பேசினாலும் செய்தாலும் அவருக்கு தெரிந்ததாக இருக்கிறதா? அப்படிப் பட்டவர்களை கையாளுவதில் கவனம் தேவை. அது மிகச் சுலபமானது அல்ல. அவர்களுக்கு புதிய கோணத்தில் விசயத்தை கொடுக்க வேண்டும். முடிந்தவரை “இது என்னுடைய கருத்து, எனக்கு, நான் என்கிற வார்த்தைகளை தவிர்த்து நீங்கள் சொல்வது போல், உங்களைப் போல்தான் நானும் இந்த விஷயத்தில்” என அவர்களை முன்னிருத்தி பேசுவது நல்லது. அப்படி செய்யும் போது உகள் தோளில் ஆதர வாக ஒருகை அது யாருமையது என்றால் எல்லாம் தெரிந்த நம் நண்பருடையதாக இருக்கும்.
எல்லாம் தெரியும் ஆனால் உண்மையில் அப்படியில்லை என்பவர்களிடம் உங்களை முன்னிருத்தி பேசுங்கள் ஆதாரத்துடன் ஊர்ஜிதப்படுத்தும் விதத்தில் கருத்தை சொல்லுங் கள் கேள்வி கேளுங்கள்.
நட்புறவில் நாட்டம் கொண்டவர்தான் ஆனாலும் நமக்கு சவாலாக இருக்கிறார் என்கிற நிலை என்றால் நம் விருப்பத்தைவிட அவர் களுடைய நோக்கத்திற்கு அதிக கவனம் செலுத்தும் வகையில் நம் உரையாடல் செயல் இருக்கும் பட்சத்தில் அவர்களை கையாளுவதில் சிக்கல் சிரமம் இருக்காது. நம்மை பற்றி அடுத்தவர்கள் எந்த அளவிற்கு அக்கறை உள்ளது என்ற கவனத்தில் குறியாக இருப்பவர்கள் அவர்களது நோக்கத்தில் இருந்து வேறுபடும் போது பாதிக்கப்படுகிறார்கள்.. அதனால் நமக்கு சவாலாக உருமாறுகிறார்கள். அவர்களது உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதாக நம் நடவடிக்கை இருந்தால் நிச்சயம் அவர்கள் நம்மோடு கைகோர்த்து கொள்வார்கள்.
உலகில் பாராட்டுதலுக்கு பணியாதவர் கள் இருக்க முடியாது. பாராட்டு பெறுவது தன் நோக்கமாக கொண்டிருப்பவர்களிடம் அவர்களை பாராட்டும் படி நம் பேச்சும் நடவடிக்கைகளும் இருந்தால் அவர்களும் நாமும் ஒருபக்கம்.
இப்படி சவாலாக இருப்பவர்கள் நம் வெற்றிக்கு துணை புரிகிறார்கள் என்று எண்ணிக் கொண்டு சமாளிக்க கற்றுக்கொள்வோம். எனவே சவால் வெற்றிக்குத்தான். சமாளிக்க தயாராகுங்கள். வெற்றிக்கு வாழ்த்துக்கள்.

Thanks :Author: ஆர். முருகேசன், M.A., M.Phil., Ph.D. (Psy)

வெற்றி ‘ குழப்பமில்லா குறிக்கோள்


ஆசை, குறிக்கோள் இவைகளை மனதிற்குள் உருவாக்குவதில் பல நேரங்களில் நம்மில் பலர் குழப்பிக்கொள்கிறார்கள். விருப்பப்படுவதை எப்படி பெறுவது? என்ன பலன் கிடைக்கப் போகிறது என்று அறியாமலே நம்மால் நம் மனதை ஒருமுனைப்படுத்த முடியாது. நமது மூளைக்கு இப்படிப்பட்ட பயனைத்தான் பெறப் போகிறோம் என்றதெளிவான ஒரு படத் தோற்றத்தை உருவாக்கிக் கொள்ள நம் மனதிற்குள் தெளிவான செய்தியை அனுப்ப வேண்டும்.
‘தொடங்குவதில் வெற்றி தொடர முனைகிறது’ என்று ‘யாரோ’ சொன்ன பழமொழி நம் மனதிற்கு செய்தியை அனுப்ப வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறது.
நமக்கு தெரிந்த நிறைய நண்பர்கள் குழப்பத்தின் உச்சத்தில் இருப்பதைக் கண்ட அனுபவம் நமக்கு இருக்கலாம். ஒன்றை செயல் படுத்துவதாக சொல்லிக்கொண்டு சொல்லாததை செயல்படுத்த முனைய முயற்சிப்பார்கள். செயல்படுத்துவதில் தடுமாற்றம் ஏற்படுவதால் அடுத்த செயலுக்கு மாறுவார்கள். இப்படியே மாறி மாறி சிந்திப்பதும் செயல்படுத்துவதுமாக தோல்வியை சந்திப்பதையே வாடிக்கையாக்கி கொண்டிருப்பார்கள். அவர்களின் பிரச்சனை மிகவும் தெளிவானது. தீர்வும் மிகவும் இலகு வானது. எதை அடைய வேண்டுமென்று அவர் களுக்கே தெரியவில்லை என்பதுதான் உண்மை. அதனை தெளிவுபடுத்திக் கொண்டால் அவர் களது எண்ணம் ‘வெற்றி’ உருமாற்றமடையும்.
என்ன நடக்க வேண்டும் என்பதை குறிக்கோளாக வைத்துக்கொள்ள வேண்டும். மாறாக என்ன நடக்கக்கூடாது என்பதில் அதீத கவனமும் அக்கறையும் எடுத்துக்கொள்வதால் நமக்கு குறிக்கோள் குழப்பம் ஏற்பட்டுவிடுகிறது.
நமது புலன்களுக்கு குறிக்கோளின் நன்மையை விவரிக்கும்படி உணர்வுகளை படமாக்கி மனத்திரையில் திரையிட வேண்டும். உதாரணத்திற்கு உங்களுக்கு பிடித்த ஒரு உணவு வகையை நினைத்து அதனை சாப்பிட்டால் எப்படி சுவையாக இருக்கும் என்று மனதில் அதை சாப்பிடுவதாக எண்ணுங்கள். உமிழ்நீர் சுரக்கிறதா? சுரந்தால் நீங்கள் உங்கள் ஆசையை உணர்வுப்பூர்வமாக படமாக்கியிருக்கிறீர்கள் என்று அர்த்தம். இல்லையேல் ஏனோதானே என்று நினைத்திருக் கிறீர்கள் என்றஉண்மையை நீங்களே உணர்வீர்கள். இதைப் போலவே தான் உங்கள் குறிக்கோளும் உணர்வுப்பூர்வமான படமாக மனத்திரையில் திரையிடப்பட வேண்டும்.
குறிக்கோளை அடையும்போது எப்படி உணர்வீர்கள்; எப்படி மற்றவர்களால் பாராட்டப்படுவீர்கள்; பாராட்டு பெறும் தருணத்தில் எத்தகைய சந்தோஷ வார்த்தைகளை உங்கள் செவிகள் கேட்க நேரிடும் என்பதை மனதில் படமாக்கிப் பாருங்கள். உங்களின் வெற்றி எப்படிப் பட்டது என்று இப்போது உணர்வீர்கள்.
உங்களின் குறிக்கோளின் எதிர்கால வெளிப்பாடுகள் என்ன என்பதை மனக்கண் முன்னிருத்திப் பாருங்கள். கார் வாங்க வேண்டும் என்பதைவிட எந்த நிறுவனத்தின் எந்த வகை மாடல் கார் வாங்க வேண்டும் என்றோ தேர்வில் நிறைய மதிப்பெண் பெறவேண்டும் என்பதை விட என்னுடைய ’2 மதிப்பெண் 1193 ஆக இருக்கும் என்றோ வணிகம் அல்லது தொழில் மூலம் என்னுடைய வருமானம் வருடம் 5 இலட்சமாக இருக்கும் என்றோ உங்கள் குறிக்கோளில் தெளிவும் உறுதியும் இருக்க வேண்டும்.
நமது மூளை ஓர் உயிரியல் கணனி. அதில் உங்களது தேவை எதுவாக எப்படியாக இருக்க வேண்டும் என்பதை தெளிவாக தவறில்லாமல் மனம் என்னும் மென்பொருளால் பதிவு செய்து விடுங்கள். நிச்சயமாக வெற்றி என்னும் செயல் வடிவத்தில் தான் வெளிப்படும்.
ஒரு செயலை தொடங்கும் முன் கண் களை மூடிக்கொண்டு வழக்கமாக சுவாசிப்பதை விட சற்று அதிகமான காற்றை சுவாசியுங்கள். சில நொடிகள் கழித்து சுவாசித்த காற்றைஅதிக நேரம் எடுத்துக்கொண்டு வெளியிடுங்கள். தொடர்ந்து சில தடவைகள் செய்யுங்கள். இப்போது உங்கள் செயல், செயல்திட்டம், வெற்றிநிலை இவைகளை மனதில் படமாக்குங்கள். பாராட்டு பெறப்போகும் செயலை செய்ய போகிறேன் என மனதில் பதிந்து ஒருமுக நேர்முக உந்தலுடன் செயலாற்றத் தொடங்குங்கள் இனி,
குழப்பமில்லா குறிக்கோள் நோக்கி நீங்கள்….
நிச்சயமான வெற்றி உங்களை நோக்கி….


Thanks : Author: ஆர். முருகேசன், M.A., M.Phil., Ph.D. (Psy)

தன்னம்பிக்கையுடன் வாழுங்கள்! வாழ்க்கையின் மகத்துவத்தை உணருங்கள்!


மரணம்’ என்ற வார்த்தையைக் கேட்டாலே நம் மனதில் ஒரு வகையான அவஸ்த்தை ஏற்படுகிறது. மரண பயம் என்பது எல்லோருக்கும் உண்டு. ‘ஜனனம்’, ‘மரணம்’ போன்றஇரு விஷயங்களுக்கு மட்டுமே விஞ்ஞானத்தால் இன்னும் பதில் சொல்ல இயலவில்லை. எல்லோருக்கும் மரணம் நிச்சயம். ஆனால் எப்பொழுது, எப்படி என்பது தான் சஸ்பென்ஸ் (Suspense). தன்னுடைய மரணத்தை தானே நிச்சயிப்பவர்களும் உண்டு. ‘தற்கொலை’ – தன் வாழ்க்கையைத் தானே முடித்துக் கொள்வது. கோழைகள் எடுக்கும் தைரியமான முடிவு! இந்த நிலையை நாம் பலரிடம் பார்க்கிறோம். தற்கொலை செய்து கொள்வதில் சிறு வயதினரே அதிகம் என ஆய்வுகள் சொல்கின்றன. பெண்களை விட இதில் ஆண்களே அதிகம். இன்னொரு அதிர்ச்சிக்குரிய விஷயம் என்னவென்றால் மற்றவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்லக்கூடிய உளவியல் நிபுணர்கள் கூட தற்கொலை செய்து கொள்வதுண்டு.

ஒரு இளவயதுள்ள, ஆரோக்கியமான, அசாத்திய திறமையுள்ள ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறார் என்றால் அதற்கான காரணம் என்று எதைக் குறிப்பிடுவது? வாழ்க்கையில் நேரிடும் பிரச்சனைகளை சமாளிக்கும் தைரியம் இல்லாத தன்னம்பிக்கை இழந்தவராகத் தான் இருக்க முடியும். தற்கொலை செய்ய தைரியம் இருக்கும் அவர்களுக்கு, பிரச்சனைகளை சமாளிக்கும் தைரியம் இல்லை என்பது தான் வருத்தம்.
சில வருடங்களுக்கு முன்பு எங்கள் அடுத்த வீட்டில் கணவன், மனைவி அவர்கள் பெண் குழந்தை என மூன்று பேர் இருந்தனர். கணவர் மிகவும் நல்ல குணமுடையவர், அமைதியானவர், எப்பொழுதும் அவர் முகத்தில் ஒரு சாந்தம் இருக்கும். இவர் தியானப் பயிற்சி மேற்கொண்டுள்ளாரோ என்றசந்தேகம் எனக்கு அடிக்கடி வருவதுண்டு. ஏனென்றால் அவர் ஒவ்வொரு வேலையையும் மிகப் பொறுமையாக செய்பவர். அதிகம் சத்தம் போட்டுகூட பேசமாட்டார். நல்ல வேலையும், நல்ல சம்பாத்தியமும் உள்ளவர். அவர் குடும்பத்தில், யாரையுமே கடிந்து ஒரு வார்த்தைகூட பேசியதில்லை என்று அவர் மனைவி எங்களிடம் பெருமையாக சொல்வார். அவர்களின் வாழ்க்கை சந்தோஷமாகத்தான் போய்க் கொண்டிருந்தது.
இரண்டு வருடங்கள் கழித்து அவர்கள் வேறொரு வீட்டிற்குக் குடிமாறிச் சென்றனர். அங்கு சென்று 6 மாதங்கள் கழித்து திடீரென்று அவர் தற்கொலை செய்து கொண்டார் என்றதகவல் வந்தது. அந்த தகவல் எங்களுக்குப் பயங்கரமான அதிர்ச்சியைத் தந்தது. அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் பங்குச்சந்தையில் ஏற்பட்ட பயங்கர நஷ்டம். ஒரு நல்ல வேலையில் இருக்கும் அவரால், இந்த நஷ்டத்தை எப்படியாவது சமாளிக்கலாம் என்றதன்னம்பிக்கையே வரவில்லை. எல்லா விஷயங்களையும் பொறுமையாக செய்யும் அவர், இந்த விஷயத்தில் அவசரப்பட்டுவிட்டார். அவரது மனம் திடமாக, தன்னம்பிக்கையோடு இருந்திருந்தால் இப்படி ஒரு நிலை ஏற்பட்டிருக்காது.
இது போன்று மாணவர்களிடம் தற்போது தற்கொலை எண்ணங்கள் அதிகம் காணப்படுகிறது. தேர்வுகளில் தோல்வி அடையும் மாணவர்கள் பலரும் தங்கள் வாழ்க்கை இதோடு முடிந்து விட்டது என்று எண்ணி தற்கொலை செய்து கொள்கின்றனர். தோல்விகள் தான் வெற்றியின் ஏணிப்படிகள் என்பதை அவர்கள் புரிந்து கொள்வதில்லை. தங்கள் தன்னம்பிக்கையையும், தைரியத்தையும் முழுவதுமாக இழந்து விடுகின்றனர். இது போன்று பல சம்பவங்களை எடுத்துக்காட்டாக கூறலாம். பணத்தட்டுப்பாடு, தொழிலில் தோல்வி, விவாகரத்து, வருங்காலத்தைப் பற்றிய அச்சம் போன்று வாழ்வில் நடக்கும் துயர சம்பவங்களால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொள்கின்றனர். இதனால் அவர்கள் குடும்பத்தினர் அல்லது உறவினர்கள் படும் துன்பங்கள் எத்தனை! தற்கொலை முயற்சியில் ஈடுபடுபவர்களில் சிலர் உயிர் தப்பிய பின்னர் வாழ்க்கையின் மகத்துவத்தையும், தங்கள் உறவினர்களின் முக்கியத்துவத்தையும் உணர்கிறார்கள்.
எடுத்துக்காட்டாக, எங்கள் வீட்டில் பணிபுரிந்து கொண்டிருந்த பெண், அவள் கணவனுடன் வீட்டில் எப்பொழுதும் பிரச்சனை என்று கூறுவாள். மிகவும் சிறிய வயதில் பெற்றோர்களை எதிர்த்து காதல் திருமணம் செய்து கொண்ட அவர்களுக்கு 2 குழந்தைகள். கணவன் பொறுப்பில்லாமல், எந்த வேலைக்கும் செல்லாமல் இருப்பதாகவும், தான் வீட்டு வேலை பார்த்து அதில் வரும் பணத்தையும் தன் கணவர் அநாவசியமாக செலவு செய்வதாகவும் கூறி அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டுள்ளனர். ஒருநாள் வாக்குவாதம் அதிகமாக, அவள் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தாள். ஆனால் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தாள். மருத்துவமனையில் 1 மாத காலம் இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அப்பொழுது சரியாக கவனிக்க ஆள்இல்லாததால் அவளது இரு குழந்தைகள் பெரும் அவதிக்குள்ளாயினர். அதன் பிறகு அவளது தவறைஉணர்ந்து மிகவும் வருத்தப்பட்டாள். அவளுக்கு ஏதேனும் ஒன்று நிகழ்ந்திருந்தால், அந்த குழந்தைகளின் நிலை? இப்படி தற்கொலை செய்து கொள்ளும் ஒவ்வொருவருக்குப் பின்னும் அவதிக்குள்ளாகும் பல ஜீவன்கள் உள்ளன.
ஒருவர் எந்த மனநிலையில் தங்கள் வாழ்க்கையை ஒடுக்கத் தீர்மானிக்கின்றனர்? ‘வாழ்க்கையில் எந்தப்பிடிப்பும் இல்லை, இனி எல்லாம் முடிந்துவிட்டது’ என்று தன்னம்பிக்கையை இழந்த, மிகுந்த மன அழுத்தம் உடையவர்கள் தான் தற்கொலையில் ஈடுபடுகின்றனர். பல சமயங்களில் தனிமையில் இருக்கும் பொழுதுதான் தற்கொலை எண்ணங்கள் அதிகமாகத் தூண்டப்படுகிறது. மனம் திறந்து நாம் நம் பிரச்சனைகளை நம் நண்பரிடமோ, நமக்கு நெருங்கியவரிடமோ பேசினாலே பாதி பாரம் குறைந்தது போல் உணர்வோம். ஒருவர் மன உளைச்சலுக்கு ஆளாகும் போது அவருக்கு தன்னம்பிக்கை அளிக்கும் விதத்தில் அவரது குடும்பத்தினர் நடந்து கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு மாணவர்கள் தேர்வில் தோல்வியடையும் போது அடுத்த முறைதேர்ச்சி பெறுவதற்கான வழிகளை ஆசிரியர்களும், பெற்றோர்களும் கூறி அவர்களை உற்சாகப்படுத்துதல் (Motivate) வேண்டும். அவர்களை கேலி செய்வதோ, கேவலப்படுத்தவோ கூடாது. சிறு வயதிலிருந்தே நிறைய தன்னம்பிக்கையையும், பிரச்சினைகளை எதிர்த்துப் போராடும் தைரியத்தையும் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் வளர்க்க வேண்டும். துன்பமும், துயரமும் வரும்போது தங்கள் குடும்பத்தினர் தங்களுக்கு ஒரு ஊன்றுகோலாக இருப்பார்கள் என்றஎண்ணமே அவர்களை உற்சாகப்படுத்தும், தோல்விகளை எதிர்த்துப் போராடவும் உதவும்.
எனவே, தன்னம்பிக்கையுடன் வாழுங்கள் !
வாழ்க்கையின் மகத்துவத்தை உணருங்கள்!



Author: தன்னம்பிக்கைஆசிரியர் குழு

உழைப்பு என்பது தவம்!! சாதனை என்பது வரம் !!


ஆசிரியரிடம் அவசியம் இருக்கவேண்டிய குணநலன்களாக நீங்கள் கருதுவது?
1. ஒழுக்கம்
2. வகுப்பைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் திறமை
3. கற்றுக்கொடுப்பதில் பிரமாதம் என பெயரெடுக்கும் ஆற்றல்
4. சொல்லும் வண்ணம் முதலில் தன்னை மாற்றிக் கொள்ளும் பாங்கு
ஒரு நிறுவனத்தின் / ஒரு நண்பனின் வழி காட்டுதல் ஒருவரின் வாழ்க்கைப் பாதையை மாற்றிவிடக் கூடுமா?
நிச்சயமாகக் கூடும். பாரதிராஜா என்கிற மாணவன் ஒன்பதாம் வகுப்பில் இரண்டு முறை தேர்ச்சி பெறாத மாணவனாக எங்கள் பள்ளியில் வந்து சேர்ந்தான். பத்தாம் வகுப்பில் நடுநிலையான மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்தான். நானே விருப்பப்பட்டு 11ம் வகுப்பில் பொருளாதாரப் பிரிவில் சேர்த்தேன். 12ம் வகுப்பில் 1100 மதிப்பெண் எடுத்தான். நல்ல கல்லூரியில் சேர்ந்து கொண்டு நல்ல நட்பு வட்டத்தை அமைத்துக் கொள் என்று அறிவுறுத்தினேன். திருச்சி செயின்ட்ஜோசப் கல்லூரியில் மெரிட்டில் இடம் கிடைத்துப் படித்தான். ஐ.அ.ந. தேர்வுக்கு தயார்செய்து கொண்டிருந்த நண்பனை நட்பாக்கிக் கொண்டான். அந்த மாணவனும் பாரதிராஜாவை உயர்த்திப் பார்க்கவேண்டும் என்று விருப்பம் கொண்டு ரிசர்வ் வங்கி தேர்வு எழுதுவதற்கு உதவியிருக்கிறார். நண்பனின் உதவியில் தேர்வு எழுதி வெற்றி பெற்று இன்று அம்மாணவர் ரிசர்வ் வங்கியில் பணிபுரிந்து வருகிறார்.
ஒருவரின் வளர்ச்சி It depends upon the Friends, it depends upon the Institution, and It depends upon the School என்று தான் அமைகிறது.
ஒருவருடைய நன்னடத்தை, வாழ்க்கைத்தரம், இலக்கு, தன்னம்பிக்கை, வெற்றி ஆற்றல் உயர்வதற்கு காரணமாவது ஒருவர் படிக்கும் கல்வி நிலையத்தின் தரத்ததை பொறுத்து அமையும் என்பது உண்மை.
மாணவ மாணவிகளுக்கு நீங்கள் தரும் அறிவுரை…
தன்னம்பிக்கை, ஓய்வில்லாத உழைப்பு, சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்து செயல்படும் மாணவர்களாக நீங்கள் இருக்க வேண்டும்.
முயற்சி என்பது வேள்வி உழைப்பு என்பது தவம் சாதனை என்பது வரம்
தவம் இருந்தால் தான் வரம் கிடைக்கும். யாரொருவர் உழைக்கிறாரோ அவர் தான் முன்னே வர முடியும் என்பதை உணர வேண்டும். தியாகம் செய்தவர்கள் மட்டுமே உயர்வடைய முடியும். 10ம் வகுப்பு, 12ம் வகுப்பில் தூக்கத்தை, பொழுது போக்கை தியாகம் செய்ய கற்றுக் கொள்ள வேண்டும்,
“Enjoy now suffer later or Suffer now enjoy later”
இப்பொழுது கஷ்டப்பட்டு பலனை பின்னாளில் அனுபவிக்கப் போகிறீர்களா? இப்பொழுது விளையாடி பின்னாளில் கஷ்டப்படப் போகிறீர்களா? எங்கள் பள்ளியின் வகுப்பறை ஒவ்வொன்றிலும் நாங்கள் எழுதியிருக்கும் வாசகம் இதுதான்.

நான் ஒரு வெற்றியாளர்


இப்படி நான் எழுதி வைத்திருப்பது கண்டு சிலர் பல விதமாக பேசுவதை கேட்டிருக்கிறேன். ஆனால் நான் ஒரு வெற்றியாளர் என ஆழ்மனதிற்குள்ளும் எழுதி வைத்துள்ளேன் என்பது அந்த சிலருக்கு தெரியாது. நான் ஒரு வெற்றியாளர் என்று உச்சரிக்கும் போது அல்லது மனதிற் குள்ளேயே சொல்லிக் கொள்ளும் போது கிடைக்கும் தன்னம்பிக்கை, ஆர்வம், நினைத்த காரியத்தை சாதிக்க மேற் கொள்ளும் உத்வேகம், செயல்பாடுகளில் உள்ள விவேகமான வேகம் இவை அனைத்தும் பிறருக்கு தெரிவதில்லை.
நண்பர்களே, நான் ஒரு வெற்றியாளர் என நம்பிக்கை கொள்ளுங்கள் எதை செய்வதாக இருந்தாலும் அதற்கான ஆர்வம் பிறக்கும். ஆர்வத்துடன் நான் ஒரு வெற்றியாளர் என்று சொல்லிப் பாருங்கள். சாதிக்க வேண்டிய செயலுக்கான உத்வேகம் உங்களுக்குள் ஊற்றெடுக்கும். நான் ஒரு வெற்றியாளர் என்றசொல் ஆழ்மனதிற்குள் பதிந்து விட உத்வேகம் தெளிவான திட்டத்தை தீட்டும். திட்டத்துடன் நான் ஒரு வெற்றியாளர் என சொல்லிப் பாருங்கள். செயலில் விவேகமான வேகம் தென்படும். பிறகென்ன நீங்கள் மனதிற்குள் சொன்னதுதான். என்ன சொன்னீர்கள் நான் ஒரு வெற்றியாளர் . நிச்சயம் நீங்கள் வெற்றியாளர் தான். நண்பர்களே, ஒரு விஷயத்தை ஆழ்மனதில் பதிய வைத்துவிட்டால் அது செயலாக்கம் பெற்றேதீரும். அதனால் தான் இதனை படிக்கும் உங்களையும் இத்தனை நாள் நான் ஒரு வெற்றியாளர் என உதட்டளவில் இருந்து உள்ளம் வரை உச்சரிக்கச் செய்தேன். நீங்கள் ஒரு வெற்றியாளர் என பிறர் சொல்வதைக் காட்டிலும் நான் ஒரு வெற்றியாளர் என நீங்களே சொல்லிக் கொள்ளும்போது கிடைக்கும் சக்தி மிகவும் அதிகம். இது ஒரு வெற்றியாளரின் தாரக மந்திரம். எனவே எப்போதும் சொல்லிக் கொள்ளுங்கள் இப்படி “நான் ஒரு வெற்றியாளர்”.
உங்கள் கையால் அல்லது உங்களின்பால் அன்புகொண்டவரின் கையால் எழுதி, படுக்கையை விட்டு எழுந்ததும் உங்கள் பார்வை படும் இடத்திலும் முகம் பார்க்கும் கண்ணாடிக்கு அருகில், பூஜை அறையில், சாவிக்கொத்து மாட்டும் இடத்தில், காலணிகள் வைக்கும் இடத்தில் ஒட்டி வைத்துக் கொண்டால், நான் ஒரு வெற்றியாளர் என்ற இந்த மந்திரம் மகத்தான மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது உளவியல் உண்மை.
- ஆர். முருகேசன், M.A., M.Phil., Ph.D. (Psy)
மனநல ஆலோசகர், மனித வளமேம்பாட்டுப் பயிற்சியாளர்

வெற்றிச்சக்கரம்


         எனது நண்பரிடம், பேசிக்கொண்டிருக்கும் போது வெற்றி என்பது என்னவென்று கேட்டேன். ‘வெற்றி என்பது மற்றவற்றில் இருந்து வேறுபட்ட, மாறுபட்ட தனித்துவம் நிறைந்த நேர்முக உந்து சக்தியுடன் முன்னோக்கி சுழலும் சக்கரம்’, என அவர் சொன்னார். சக்கரம் சுழலும் போது சக்கரத்தின் ஒரு பகுதி கீழே வரும்; ஆனால் நிற்காது நகரும். சக்கரம் முன்னோக்கிச் செல்லசக்கரத்தின் ஏதாவது ஒரு பகுதி கீழே வந்து வந்து முன்னேறும். கீழே வருவது முன்னோக்கிச் செல்லத்தான் என்பதை மனதில் பதிந்து வைத்துக் கொள்ளுங்கள். வெற்றிச் சக்கரத்தின் இயல்பு முன்னோக்கி மட்டுமே செல்லும். வெற்றிச் சக்கரத்தில் முயற்சி என்பது வெற்றிச்சக்கரத்தின் பகுதிகள். முயற்சியின் கடமை வெற்றிச் சக்கரத்தை சுழலவைப்பது. வெற்றிச்சக்கரம் எத்திசையிலும் செல்லும். மேடான பகுதியில் ஏறவேண்டுமா ஏறும். பள்ளத்தை கடக்க வேண்டுமா கடக்கும். எப்படி சென்றாலும் சக்கரம் சுழன்றதூரம் தான் வெற்றியின் அளவு. தூர அளவு முற்றுப்பெறாது என்பது தான் உண்மை. நகரும் பாதையில் இடறும் தடைகள் தான் தோல்வி. பாதையின் தன்மைக்கு தகுந்தவாறு சக்கரம் சுழலும். ஆனால் தடைபட்டு நிற்கவே நிற்காது. இன்னொரு பிரத்தியேக தன்மை எங்கே வேகமாக, மெதுவாக சுழல வேண்டும் என்பது தெரியும். வெற்றிச்சக்கரம் நன்றாக இருக்கிறதே எங்கே இருக்கிறது எனக்கேட்டேன். நண்பர் சிரித்தார், பின் பதிலளித்தார், எல்லோரிடமும் இச்சக்கரம் இயற்கையாகவே இணைக்கப் பட்டிருக்கிறது, என நண்பர் சொன்னதை கேட்டேன். நண்பரின் பெயர், விலாசம் தெரிந் தால் எத்தனை விசயங்களை அவரிடமிருந்து பெறமுடியும் அல்லவா?
அவரது பெயர் தன்னம்பிக்கை. முகவரி உங்களுக்கோ. உங்களுக்குள்ளே இருக்கும் தன்னம்பிக்கையை சந்தியுங்கள். எப்போதும் வெற்றி நிச்சயம்.

தன்னம்பிக்கையுடன்
ஆர். முருகேசன்
M.A., M.Phil., Ph.D. (Psy)
மனநல ஆலோசகர்
மனிதவள மேம்பாட்டு பயிற்சியாளர்

பேசத் தெரிந்திடு! வாளை வீசத்தெரிந்திடு!!


            குழந்தையாகவே இருந்திருக்கலாம். எவ்வளவு சந்தோசமாக இருக்கிறார்கள் பார்த்தாயா என்ற நண்பரின் வார்த்தை களுக்கு காரணமான குழந்தை களை நோக்கி எனது கண்கள் குவிந்தன. துள்ளி விளை யாடும் அந்த குழந்தைகளின் குதூகலம் சற்று நேரம் என் குழந்தை பருவத்தை நினைவு படுத்தியது. சந்தோசம் மனதில் ஊற்றெடுத்தது. அதே வேளை அவர்கள் விளையாடுவதை சற்று கூர்ந்து நோக்கினால் வெற்றியின் வெளிச்சம் பிரகாசமாக பளிச்சிட்டது. விளையாடிய குழந்தைகள் கீழே விழுவதை பார்த்தேன். ஏறத்தாழ எல்லா குழந்தை களும் ஏதோ ஒரு இடத்தில் அல்லது விளையாட்டின் ஒரு நிலையில் விழத்தான் செய்தனர். ஆனால் விழுந்த அவர்கள் சுற்றும் முற்றும் பார்க்கவில்லை. யாராவது பார்த்தார்களா? என்ற கவலை அவர்களிடம் இல்லை. விழுந்தவர்கள் எழுந்தார்கள். பின்பு அவர்களது விளை யாட்டினை தொடர்ந்தனர். விழுந்ததை தோல்வியாக கருதாமல் விழாமல் இருப்ப தற்கு எப்படி என்பதை கற்றுக் கொள்ளும் அனுபவமாக கருதிக்கொண்டார்கள். விளை யாட்டில் கிடைக்கும் உச்ச கட்ட சந்தோசமே அவர்களது வெற்றி. அதனை நோக்கி மட்டுமே அவர்களது முனைப் புடன் கூடிய செயல். அதனால் கீழே விழும்போது நம்மை யார் பார்க்கின்றனர் அது அவமானமா என்றெல்லாம் மனதை அலைகலைக்க விடாமல் அவர்களின் வெற்றியான சந்தோசத்தை மட்டுமே மனக் கண்ணால் பார்க்கின்றனர். நண்பர்களே, நம்  ஒருவருக்குள்ளும் குழந்தை இருக்கிறது. நமக்கு தோல்வி வரும்போதும் வெற்றியை தவற விடும்போதும் அந்த குழந்தையை கூப்பிடுங்கள். துவண்டு விழுவதில் இருந்து துள்ளி ஒடும் உற்சாகத்தை பெறுவோம்.


வெற்றிக்கு இன்னொருவரும் அவசியம் என்பது போல் மற்றொரு விசயம் என்னவென்றால் பேசத் தெரிய வேண்டும். வெற்றி பெறும் வகையில் பேசத் தெரிய வேண்டும். ஒருவரிடம் அல்லது மற்றவர்களிடம் பேசத் தெரியவேண்டும். அது நேர்முகத் தேர்வாகட்டும் மேடைப்பேச்சாகட்டும் அதில் நீங்கள் திறம்பட பேச தெரிந்தால் வெற்றியின் முகவரி உங்களுக்கு கிடைத்ததாக அர்த்தம். மொழி எதுவாக இருந்தாலும் திறம்பட பேசத் தெரிய வேண்டும். அதற்கான காரணிகள் நிறைய உள்ளன என்றாலும் கீழ்க் கண்டவைகள் உங்களை திறம்பட பேச வைக்க உதவும். பேசுவதற்கு அடிப்படையான மையக்கருத்தைப் பற்றிய அறிவை முழுவதுமாக வளர்த்திடுங்கள். மையக்கருத்தைச்சார்ந்த விசயங்களை நன்கு தெரிந்து வைத்திருந்தால் மடைதிறந்த வெள்ளம் போல் பேச முடியும். ஆனால் அதில் மடைமை இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பேசும் சூழலுக்கு தகுந்தவாறு உங்கள் உடைகள் இருக்க வேண்டும். மற்றவர்களின் கவனத்தை சிதறடிக்காமல் இருப்பது மாதிரியும் உங்களை அசௌகரிக்கப்படுத்தாமலும் உங்கள் உடை இருக்க வேண்டும். நேர்முகத்தேர்வுக்கும் மேடைப்பேச்சுக்கும் உள்ள உடை வித்தியாசத்தை கவனத்தில் கொள்ளுங்கள்.
நீங்கள் எதைப்பற்றி பேச போகிறீர்கள் என்பதில் தெளிவுக் கொண்ட உறுதி பெற்றிருங்கள். தன்னம்பிக்கை கொண்டிருங்கள். உங்களால் திறம்பட பேச முடியும் என்ற தன்னம்பிக்கை மற்ற காரணிகளை ஊக்கப்படுத்தும். பேசும் சூழலில் இருந்து எந்த காரணத்தைக்கொண்டும் விலகி செல்ல வேண்டாம். பேசப்போகும் இந்த விசயத்தால் அப்படி நடக்கும் இப்படி நடக்கும் என்ற கற்பனைக்கு இடம் கொடுத்து பேசும் சூழலில் இருந்து விலகி செல்லாதீர்கள்.
அது உங்கள் பேச்சில் தடுமாற்றத்தை ஏற்படுத்தும் சில வேளை தடம் மாற்றத்தையும் செய்து விடும் அபாயகரமானது. பதில் சொல்லும் போதாகட்டும் அல்லது கருத்துக் களை எடுத்து வைக்கும் போதாகட்டும் தவறுவது சகசம்; ஆனால் அந்த சூழல் நிலையில் பதற்றப் படாமல் இயற்கையாக நன்கு சுவாசியுங்கள். ஒரு பாடகர் மூச்சிழுப்பது போல் சுவாசியுங்கள் அது உங்களை சாந்தப்படுத்தும்; உற்சாகமூட்டும். உங்கள் நண்பரிடம் பேசுவது போல் (டா, டி போட்டு பேசுவதல்ல) பேசுங்கள். உங்களை முழுவதுமாக இலகுவாக வெளிப்படுத்துங்கள். உணர்ச்சி வசப்படாமல் வெளிப்படுத்துங்கள்.
உங்களை ஆமோதித்து அதற்கான அடையாளமாக முகத்தில் சந்தோசத்தையோ கைதட்டல்களையோ  எதிர்ப்பார்க்காமல்     யமுன்னேற்றச் சிந்தனைகளை வளர்க்கும்     பொருட்டு தன்னம்பிக்கை மாத இதழால் நடத்தப்படும் சுயமுன்றேற்றப் பயிரலங்குகள் சமுதாய முன்னேற்றத்திற்கு சாவியாக செயலாற்றி வருகிறது.
இவ்வகையில் கோபிசெட்டிபாளையத்தில் தன்னம்பிக்கை மாத இதழும், ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹை-டெக் பொறியியல் கல்லூரி, கோபியும் இணைந்து கடந்த ஜுன் மாதம் “தேசம் உன் சுவாசம்” என்ற தலைப்பில் சுயமுன்னேற்றப் பயிலரங்கை சிறப்புடன் நடத்தியது.
பயிலரங்கத்தில் பயிற்சியாளராக கோபி கம்பன் கல்வி நிலைய தாளாளர் திரு. ட.ட. காளி யண்ணன், கௌரவ விருந்தினராக கோபி, பாரியூர் அம்மன் ஸ்பின்னிங் மில்ஸ் (பி) ட் நிர்வாக இயக்குனர் தங்கமணி திரு. ட.ங.  பழனிச் சாமி, கோபி போக்குவரத்து தலைமைக் காவலர் திரு. உ.த. இராமலிங்கசாமி, கல்லூரியின் இணைச்செயலர் திரு. எ.ட.கெட்டிமுத்து, முதல்வர் திரு. ட. தங்கவேல் நயஏடஇ முதல்வர் திரு. க.கனக ரத்தினம், தன்னம்பிக்கை மாத இதழின் மக்கள் தொடர்பு அலுவலர் திரு. ங. நம்பிராஜன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தனது கனிவுடன் கூடிய சிறப்பான சேவைக்காக ரோட்டரி சங்கம், அரிமா சங்கம், வ’ள் ஙங்ய் சங்கம் விருதுகளையும், முதலமைச்சர் பதக்கத்தையும் பெற்ற கோபி போக்குவரத்து தலைமைக் காவலர் திரு.உ.த.இராமலிங்கசாமிக்கு பயிலரங்கத்தில் பாராட்டு வழங்கப்பட்டது.
பயிற்சியாளராக கலந்து கொண்டு சிறப்பித்த திரு. ட.ட. காளியண்ணன் தன் உரையில், “தேசம் என் உயிர், தேசத்துக்காக நான் என்ற உணர்வு ஒவ்வொருவர் உள்ளத்திலும் உருக் கொள்ள வேண்டும். பேசுங்கள். உண்மையில் உங்கள் பேச்சை அல்லது உங்களை ஆமோதிக்க வேண்டும் என்பது தான் உங்கள் நோக்கம் என்றாலும் கூட நம் எதிர்ப்பார்ப்பு விளையாத போது உங்களை பேசும் சூழலில் இருந்து வெளியே இழுக்க முற்படும். எல்லாவற்றையும் பேசலாம். பேசி பாருங்கள். ஆமாம் முதலில் உங்களிடம் பேசிப்பாருங்கள். எவ்வளவு நேரம் பேசிப்பார்க்க முடியுமோ அவ்வளவு நேரம் பேசிப்பாருங்கள். பட்டை தீட்ட தீட்ட வைரத்தின் பிரகாசம் அதிகமாவதைப்போல் உங்கள் பேச்சால் உங்களை பட்டைத் தீட்டிக் கொண்டால் …
ஆம் நண்பர்களே,
பேசத் தெரிந்துக்கொள்ளுங்கள்;
வெற்றிக்கான வாளை
வீசத்தெரிந்தவர்களாவீர்கள்.

Author: 
மனநல ஆலோசகர்
மனிதவள மேம்பாட்டு பயிற்சியாளர்